நீலகிரி : சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, உதகையில் இன்று நடைபெற்ற சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணியில், 200 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.
நீலகிரி : சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, உதகையில் இன்று நடைபெற்ற சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணியில், 200 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

சாலை பாதுகாப்பு குறித்து அனைத்து மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று தொடங்கிய 30 -வது சாலை பாதுகாப்பு வார விழா வரும் 10 -ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதையடுத்து, இன்று உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா தொடக்கி வைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினார். இப்பேரணி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக, சேரிங்கிராஸ் பகுதியை சென்றடைந்தது.

இந்த பேரணியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், சுற்றுலா வாகன ஓட்டிகள், வாகன பயிற்சி பள்ளி பயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 200 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.
மேலும், சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு வரும் நாட்களில் தலைகவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி, ஓட்டுநர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகளும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டிகள் ஆகியனவும் நடத்தப்படவுள்ளன.

சாலை பாதுகாப்பு குறித்து அனைத்து மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று தொடங்கிய 30 -வது சாலை பாதுகாப்பு வார விழா வரும் 10 -ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதையடுத்து, இன்று உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா தொடக்கி வைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினார். இப்பேரணி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக, சேரிங்கிராஸ் பகுதியை சென்றடைந்தது.

இந்த பேரணியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், சுற்றுலா வாகன ஓட்டிகள், வாகன பயிற்சி பள்ளி பயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 200 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.
மேலும், சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு வரும் நாட்களில் தலைகவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி, ஓட்டுநர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகளும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டிகள் ஆகியனவும் நடத்தப்படவுள்ளன.