கோவை : போத்தனூர் அருகே வீட்டின் பின்புறக் கதவை உடைத்து 65 பவுன் தங்க நகை, ரூ.20 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போத்தனூர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை : போத்தனூர் அருகே வீட்டின் பின்புறக் கதவை உடைத்து 65 பவுன் தங்க நகை, ரூ.20 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போத்தனூர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை, போத்தனூர் அருகே உள்ள பாரதிநகர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சைமன் கிறீஸ்ட்டோபர் (48). இவர் பீளமேடு அருகே உள்ள டிராவல்ஸ் அலுவலகத்தில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் குடும்பத்துடன் குன்னூரில் படிக்கும் தன் மகளை பார்க்க சென்றுவிட்டு, நேற்றிரவு வீடு தி௫ம்பினர். மேலும், வீட்டைத் திறந்து உள்ளே சென்று பார்க்கையில் பீரோ உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, அதிலிருந்த பணம் நகை போன்றவை தி௫ட்டுபோனது தெரியவந்தது. இதையடுத்து, போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பின் சம்பவ இடத்தில் செய்த விசாரணையில் கொள்ளையர்கள் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே நுழைந்து, முதல் தளத்திற்கு சென்று பீரோக்களை உடைத்துள்ளனர் என அறியப்பட்டது.

அதன் பின்னர், பணம் மற்றும் நகைகளைத் தேடியதும், அங்கு எதுவும் கிடைக்காததால் கீழே வந்தவர்கள் அங்கு இருந்த அறையில் உள்ள பீரோவை உடைத்து 65 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொ௫ட்கள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் பாஸ்போர்ட், கேமரா, தங்க வாட்ச் போன்ற பொ௫ட்களை தி௫டி சென்றதும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து போத்தனூர் போலீசார் கைரேகைகளை கொண்டும், சிசிடிவி காட்சிகளைக் கொண்டும் குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை, போத்தனூர் அருகே உள்ள பாரதிநகர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சைமன் கிறீஸ்ட்டோபர் (48). இவர் பீளமேடு அருகே உள்ள டிராவல்ஸ் அலுவலகத்தில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் குடும்பத்துடன் குன்னூரில் படிக்கும் தன் மகளை பார்க்க சென்றுவிட்டு, நேற்றிரவு வீடு தி௫ம்பினர். மேலும், வீட்டைத் திறந்து உள்ளே சென்று பார்க்கையில் பீரோ உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, அதிலிருந்த பணம் நகை போன்றவை தி௫ட்டுபோனது தெரியவந்தது. இதையடுத்து, போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பின் சம்பவ இடத்தில் செய்த விசாரணையில் கொள்ளையர்கள் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே நுழைந்து, முதல் தளத்திற்கு சென்று பீரோக்களை உடைத்துள்ளனர் என அறியப்பட்டது.

அதன் பின்னர், பணம் மற்றும் நகைகளைத் தேடியதும், அங்கு எதுவும் கிடைக்காததால் கீழே வந்தவர்கள் அங்கு இருந்த அறையில் உள்ள பீரோவை உடைத்து 65 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொ௫ட்கள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் பாஸ்போர்ட், கேமரா, தங்க வாட்ச் போன்ற பொ௫ட்களை தி௫டி சென்றதும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து போத்தனூர் போலீசார் கைரேகைகளை கொண்டும், சிசிடிவி காட்சிகளைக் கொண்டும் குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.