கோவையில் வனவிலங்கு வேடமணிந்து மாவட்ட ஆட்சியரிடம் நூதன முறையில் மனு கொடுக்க வந்த விவசாயிகள்

கோவை : தொண்டாமுத்தூர் பகுதியில், வனவிலங்குகளால் விளைநிலங்களில் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி சிறுத்தை, புலி,கரடி என வனவிலங்கு வேடமணிந்து மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மனு அளித்தனர்.


கோவை : தொண்டாமுத்தூர் பகுதியில், வனவிலங்குகளால் விளைநிலங்களில் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி சிறுத்தை, புலி,கரடி என வனவிலங்கு வேடமணிந்து மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மனு அளித்தனர். 



இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட குழு தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது :- தொண்டாமுத்தூர் பகுதியில் ஏராளமான விவசாயிகளின், விளை நிலங்களில் யானைகள், மயில், பன்றி, செந்நாய், குரங்கு சிறுத்தை போன்றவைகளால் விவசாய பயிர்கள் பாதிப்பு ஏற்படுகிறது. அவை, தோட்டங்களில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, கோழி போன்றவற்றை கொன்று விடுகின்றன. 

மேலும், அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. அதனைப் பிடிக்க வனத்துறை 15 நாட்களுக்கு முன்பு கூண்டு வைத்தது. ஆனால், இன்று வரை அது பிடிபடவில்லை. வனத்துறையினர் மெத்தனமாகச் செயல்படுகின்றனர். இதனால், விவசாயிகள் அச்சத்துடனே அங்கு விவசாயம் செய்து வருகிறோம். 

வன நிர்வாகம், சிறுத்தை நடமாட்டத்தை ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், அது விளைநிலங்களில் வருவதைத் தடுக்க சிறப்பு படை நியமனம் செய்ய வேண்டும். மேலும், விளை நிலங்களில் வனவிலங்குகள் வருவதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர் பேசினார். 

இந்த கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, வனவிலங்கு வேடமணிந்து வந்து கொடுத்தனர். இதனைப் பிற மனுதாரர்கள் ஆச்சரியமாக பார்த்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...