நீலகிரி : உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் நடக்கும் 17-வது ரோஜா கண்காட்சியை முன்னிட்டு, 4 ஆயிரம் ரகங்களில் 30 ஆயிரம் செடிகளை தயார் செய்யும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி : உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் நடக்கும் 17-வது ரோஜா கண்காட்சியை முன்னிட்டு, 4 ஆயிரம் ரகங்களில் 30 ஆயிரம் செடிகளை தயார் செய்யும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இயற்கை எழில் கொஞ்சும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இந்த சீசன் காலங்களின் போது, வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வருகை தருவார்கள்.

இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க, உதகை மலர் கண்காட்சியின் 100-வது ஆண்டு நினைவாக தொடங்கப்பட்ட ரோஜா பூங்காவில், ஆண்டுதோறும் மலர் கண்காட்சி தோட்டக்கலைத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தாண்டு கோடை சீசனுக்காக தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்காவிலும் மலர் நாற்றுகள் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, நூற்றாண்டு உதகை ரோஜா பூங்காவில் கோடை சீசனுக்காக ரோஜா செடிகளை கவாத்து செய்து தயார் செய்யும் பணிகளில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ரோஜா பூங்காவில் 4 ஆயிரம் ரோஜா ரகங்களில் சுமார் 30 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.