உதகையில் கேசினோ சூதாட்டத்தில் 8 பேர் கைது : ரூ. 45 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

நீலகிரி : உதகையில் கேசினோ சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை செய்த போலீசார், ரூ. 45 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நீலகிரி : உதகையில் கேசினோ சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை செய்த போலீசார், ரூ. 45 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



உதகையில் கேசினோ சூதாட்டம் நடக்கவிருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெ.சண்முகப்பிரியா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து, சூதாட்ட கும்பலை பின் தொடர்ந்த தனிப்படையினர், சூதாட்டத்தில் ஈடுபட இருந்த 8 பேரை கைது செய்தனர். மேலும், சூதாட்டப் பொருட்கள், லேப்டாப், பணப் பரிமாற்ற இயந்திரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

இது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெ.சண்முகப்பிரியா கூறியதாவது:- இன்று அதிகாலை 12.15 மணிக்கு உதகை கோரிசோலை பகுதியில் உள்ள சின்கிலர்ஸ் ஓட்டலில் பெங்களூர் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த 6 பேர், அந்த ஓட்டல் பொது மேலாளர் மற்றும் மேலாளர் ஒத்துழைப்புடன் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக தகவல் கிடைத்தது. 

இதையடுத்து, காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் ரவிகுமார், திருமேனி, ஆய்வாளர்கள் ஜெயமுருகன், செல்வராணி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் ஓட்டலில் திடீர் சோதனை செய்தனர்.

அப்போது, சூதாட்ட பணம் ரூ. 1,17,900 மற்றும் 8 செல்போன்கள், பண பரிமாற்ற இயந்திரம், சூதாட்ட நோக்கர்கள் என ரூ. 45,39,990 பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இரண்டு 4 சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 

சூதாட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மாதாரப்பு விஜய் (39), பரமேஷ் (40), கர்நாடகாவைச் சேர்ந்த சதீஷ்குமார் (37), ஓம்கார் (33), ரோஹித்பாபு (37), ஆந்திராவைச் சேர்ந்த காட்டி வெங்கடேஷ் திலக்ராம் (35), கேரளாவை சேர்ந்த சோனியாவும் மோகன்(31), உதகையைச் சேர்ந்த அரிஜித் குட்டா (43) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர், என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...