இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய கவுசல்யாவிடம் ஒரு வாரத்தில் விசாரணை

நீலகிரி : இந்திய இறையாண்மைக்கு எதிராக பேட்டி அளித்த உடுமலை கவுசல்யாவிடம் இன்னும் ஒரு வாரத்தில் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என வெலிங்டன் கண்டோன்மெண்ட் முதன்மை அதிகாரி ஹரிஸ் வர்மா தெரிவித்துள்ளார்.

நீலகிரி : இந்திய இறையாண்மைக்கு எதிராக பேட்டி அளித்த உடுமலை கவுசல்யாவிடம் இன்னும் ஒரு வாரத்தில் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என வெலிங்டன் கண்டோன்மெண்ட் முதன்மை அதிகாரி ஹரிஸ் வர்மா தெரிவித்துள்ளார். 



உடுமலை கவுசல்யா கடந்த 2016-ம் ஆண்டு குன்னூர் வெலிங்டன் கண்டோன்மெண்ட் கணக்கு பிரிவில் பணியில் சேர்ந்தார். இவர் அண்மைக் காலமாக, ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அடிக்கடி பேட்டி அளித்து வந்த நிலையில், அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். 

அப்போது, இந்திய இறையாண்மைக்கு எதிராக அவர் சில கருத்துக்களை கூறினார். இதனால், அவர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணைக்குப் பின், கவுசல்யா பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கண்டோன்மென்ட் முதன்மை அதிகாரி தெரிவித்தார்.

இந்த நிலையில், இது தொடர்பாக கண்டோன்மென்ட் முதன்மை அதிகாரி ஹரிஸ் வர்மா கூறுகையில்," கவுசல்யா மீது பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் புகாரினையடுத்து, அவரிடம் இன்னும் ஒரு வாரத்தில் தனிக் குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு, அந்த அறிக்கை டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் தொடர்பாக அவர் மீது மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என்றார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...