2019-ம் ஆண்டு சிறந்த காவல்நிலைய விருதுக்காக ஆயத்தமாகும் கோவை காவல்நிலையங்கள்

கோவை : 2019?ம் ஆண்டிற்கான சிறந்த காவல்நிலையத்திற்கான விருதைப் பெறும் வகையில், கோவை மாநகரில் உள்ள சி-2 பந்தய சாலை காவல் நிலையமும், போத்தனூர் டி-3 காவல் நிலையமும் தயாராகி வருகின்றன.


கோவை : 2019?ம் ஆண்டிற்கான சிறந்த காவல்நிலையத்திற்கான விருதைப் பெறும் வகையில், கோவை மாநகரில் உள்ள சி-2 பந்தய சாலை காவல் நிலையமும், போத்தனூர் டி-3 காவல் நிலையமும் தயாராகி வருகின்றன.



மத்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும் நாட்டில் சிறந்த 10 காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கு விருதுகள் வழங்கப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு சிறந்த காவல்நிலையங்களில் ஒன்றாக கோவை ஆர்.எஸ்.புரம் காவல்நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில், வரும் 2019-ம் ஆண்டிற்கான விருதுகள் பெற கோவை மாநகரில் உள்ள சி-2 பந்தய சாலை காவல் நிலையமும், போத்தனூர் டி-3 காவல் நிலையமும் தயாராகி வருகின்றன. 



இதில், சி-2 காவல் நிலையத்தில் புகார் தர வரும் பொதுமக்களை வரவேற்கும் வகையில், வரவேற்பறையில் இருந்து சுத்திகரித்த குடிநீர், குழந்தைகள் விளையாடும் வகையில் காப்பகம், தாய்மார்களுக்குப் பாலூட்டும் அறை, காவலர்களுக்கு ஓய்வரை, பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தனி, தனி லாக்கப், குற்றப் பதிவேடுகளை காக்கும் அரை என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல, போத்தனூர் காவல்நிலையத்திலும் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த காவல் நிலையத்தில், பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தொடர்பான அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காவல் நிலையத்தில் அமைந்துள்ள சிறு நூலகம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...