வங்கிக் கடன் முகாமில் விண்ணப்பித்த அனைவருக்கும் கடன் வழங்கப்படும் : அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உறுதி

கோவை : தமிழக அரசு சார்பில் நடைபெறும் சுய தொழில் முனைவோருக்கான வங்கிக் கடன் வழங்கும் முகாமில், விண்ணப்பித்த அனைவருக்கும் கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.


கோவை : தமிழக அரசு சார்பில் நடைபெறும் சுய தொழில் முனைவோருக்கான வங்கிக் கடன் வழங்கும் முகாமில், விண்ணப்பித்த அனைவருக்கும் கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் மகளிர் திட்டத்தின் கீழ் சுயதொழில் முனைவோருக்கான சிறப்பு கடனுதவி வழங்கும் முகாம் கோவை பால்கம்பெனி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இன்று தொடங்கியது. இதனை தமிழக உள்ளாட்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு தொடங்கி வைத்ததுடன், முகாமில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டார். 

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது :- சுய தொழில்முனைவோர்களை அதிக அளவில் உருவாக்கும் வகையில், இந்த முகாம் தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுகின்றன. இம்முகாமில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கடன் கிடைக்க தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். இம்முகாமில் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள் என 39 வங்கிகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன, எனக் கூறினார். 

மொத்தம் 10 வகையான திட்டங்களின் கீழ் ரூ. 50,000 முதல் ரூ. 50 லட்சம் வரையிலான தொழில் கடன்கள் வழங்கப்பட உள்ளன. இம்முகாமில் கடனுதவிக்கு விண்ணப்பிக்க 1,000-க்கும் மேற்பட்டோர் பள்ளியில் குவிந்துள்ளனர். பெட்டிக்கடை முதல் சிறிய ரக தொழிற்சாலை வரை அமைக்க கடனுதவிகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...