கோவை மாவட்ட ஜாக்டோ - ஜியோ போராட்டக்காரர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன..? ஆர்.டி.ஐ.யில் மனு

கோவை : 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளிக்குமாறு கோவை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணனிடம் மனு அளிக்கப்பட்டது.


கோவை : 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளிக்குமாறு கோவை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணனிடம் மனு அளிக்கப்பட்டது.



பழைய ஓய்வூதிய திட்டம், அரசு ஊழியர்களுக்கான 21 மாத நிலுவைத் தொகை உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி கடந்த 22-ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பல்வேறு போராட்டங்கள், கைது நடவடிக்கைகள் என 9 நாட்களுக்குப் பிறகு வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது. 

இதனிடையே, அரசின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 4,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், தமிழகம் முழுவதும் ஜாக்டோ - ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் மீது பல்வேறு பிரிவுகளின் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. 



இந்த நிலையில், ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளிக்குமாறு கோவை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணனிடம் கலை ஆசிரியர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் மனு அளித்துள்ளார். 

போராட்டம் நடத்தியதால், காவல்துறையினர் மூலமாக வழக்கு தொடரப்பட்டு, தற்காடிலக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை, 25-ம் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் மீது தமிழ்நாடு குடிமைப்பணி - ஒழுங்கு மற்றும் மேல்முறையீட்டு விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை, 9 நாட்கள் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு விபரங்களை அளிக்குமாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...