சின்னத்தம்பியை கும்கியாக மாற்ற எதிர்ப்பு : வனத்துறையினரின் முடிவுக்கு கோவை மக்கள் ஆத்திரம்

கோவை : சின்னதம்பி யானையைக் கூண்டில் அடைத்து கும்கி யானையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு விழாவில் தெரிவித்துள்ளார்.



கோவை : சின்னதம்பி யானையைக் கூண்டில் அடைத்து கும்கி யானையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு விழாவில் தெரிவித்துள்ளார். 

கோவையில் மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு குறித்து, தேசிய அளவிலான சூழியல் மாநாடு நேற்று தொடங்கியது. 2 -வது நாளான இன்று கஜ யாத்ரா என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டனர். 

அதில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறும் போது, ஓசூரில் புகுந்த காட்டு யானையைப் பிடிப்பதற்கு இதே முறையைத் தான் பயன்படுத்தினோம். தற்போது அந்த யானை வனப்பகுதிக்குள் உள்ளது. ஆனால், சின்னத்தம்பி முற்றிலும் மாறுபட்டது. இந்த யானையைக் கூண்டில் அடைத்து கும்கி யானையாக மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. கும்கி யானையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார். 

மேலும், இந்தக் கருத்தரங்கை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் எஸ்.பி.வேலுமணி இணைந்து தொடங்கி வைத்தனர். இதில், பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் யானைகளைப் பற்றிய அறியலின் நாடகத்தை அரங்கேற்றினர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...