நீலகிரி : இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய குற்றசாட்டில் உடுமலை கௌசல்யாவை, வெலிங்டன் கண்டோன்மென்ட் நிர்வாகம் மத்திய அரசு பணியிலிருந்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளது.
நீலகிரி : இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய குற்றசாட்டில் உடுமலை கௌசல்யாவை, வெலிங்டன் கண்டோன்மென்ட் நிர்வாகம் மத்திய அரசு பணியிலிருந்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளது.
சாதி ஆவண படுகொலையின் மூலம் அனைவருக்கும் பரீச்சையமானவர் கௌசல்யா. அந்த சாதி ஆவணக் கொலையில் பலியான உடுமலைப்பேட்டை சங்கரின் மனைவி கௌசல்யா. நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் கன்டோன்மெண்டில் கிளார்க் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இவருக்கு கடந்த நவம்பர் 30 ம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் கன்டோன்மெண்டில் கிளார்க் பணி நிரந்தரமாக்கி ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே, அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இந்த குற்றச்சாட்டை பரீசிலித்த நிர்வாகம் அவரைத் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது.