மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க பெரியாரிய இயக்கங்கள் ஆலோசனைக் கூட்டம் : திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரால் பரபரப்பு

திருப்பூர் : மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டுவதற்காக, பெரியார் இயக்கங்களின் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்ட இடத்திற்கு எதிரே பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் : மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டுவதற்காக, பெரியார் இயக்கங்களின் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்ட இடத்திற்கு எதிரே பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 



பிப்ரவரி 10 -ம் தேதி திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் நடைபெறுகின்ற பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசவுள்ளார் . இந்நிலையில், அவர் வருகையை எதிர்த்து பெரியாரிய இயக்கங்களின் சார்பில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்திட திருப்பூர் மங்களம் சாலையில் உள்ள பெரியாரிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. 



இதையடுத்து, தந்தை பெரியார் திராவிடர் விடுதலைக் கழக பொதுச்செயலாளர் இராமகிருட்டிணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனைக்கூட்ட இடத்திற்கு எதிரே பா.ஜ.க.,வினர் கறுப்புக்கொடி காட்ட திட்டமிட்ட திராவிடர் கழகத்தினரைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதற்கு எதிரே திராவிடர் கழகத்தினரும் எதிர் கோஷமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனையடுத்து, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாஜகவினரோடு பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். பின்பு இராமகிருட்டிணன் செய்தியாளர்களிடம் பேசினார். 



அவர் கூறியதாவது :- மதுரையில் மோடி வருகைக்கு கறுப்புக்கொடி காட்டிய திராவிடர் கழகத்தினர் திருப்பூரில் கூடிப் பாருங்கள் என எச்.ராஜா விடுத்த சவாலை ஏற்றுக்கொள்கிறோம். பிப்ரவரி 10 -ம் தேதி திட்டமிட்டபடி கறுப்புக்கொடி காட்டப்படும். திருப்பூரும் பெரியார் மண் என நிரூபிப்போம்.

தொழில்துறை நசிவடைந்து பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், பிரதமர் மோடி திருப்பூர் வருகையை பொதுமக்கள் விரும்பமாட்டார்கள். இன்றைக்கு, பெரியாரிய இயக்கங்களின் சார்பிலான ஆலோசனைக் கூட்டம் முன்னரே தெரிவித்திருந்த நிலையில், பாஜகவினர் எதிரே போராட காவல்துறை ஏன் அனுமதித்தது. கலவர சூழ்நிலையை உருவாக்கவே பாஜக முயன்று வருகிறது, இவ்வாறு அவர் பேசினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...