கோவை ரத்தினம் கல்லூரியில் ஒரு விதை புரட்சி திட்டத்தினை ஆதரித்து பிரம்மாண்ட மனித சங்கிலி

கோவை : எழுத்து வடிவில் ஒரு விதை புரட்சி எனும் வடிவமைப்பில், பிரம்மாண்ட மனித சங்கிலியை கோவை ரத்தினம் கல்லூரி மாணவ மாணவிகள் உருவாக்கி தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.



கோவை : எழுத்து வடிவில் ஒரு விதை புரட்சி எனும் வடிவமைப்பில், பிரம்மாண்ட மனித சங்கிலியை கோவை ரத்தினம் கல்லூரி மாணவ மாணவிகள் உருவாக்கி தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். 

இயற்கை பவுண்டேசன் தன்னார்வ தொண்டு நிறுவனம், கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு சுமார் 5 லட்சம் மரக்கன்றுகள் வழங்கி உதவிட "ஒரு விதை புரட்சி" உழவனுக்கு வந்தனம் செய்வோம் எனும் பசுமைத்திட்டத்தை தொடங்கியுள்ளது. 



இதனை, எங்கும் பரவலாக்க அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளில், "ஒரு மரம் கொடுத்து உதவிடுங்கள், ஒரு விவசாயின் எதிர்கால தலைமுறை வாழட்டும்" என மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது இயற்கை பவுண்டேசன். இதன் ஆரம்பமாக, கோவை ரத்தினம் கல்லூரியில் 2000 மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் மற்றும் இயற்கை பவுண்டேசன் குழுமம் இணைந்து 2000 மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதையடுத்து, எழுத்து வடிவில் ஒரு விதை புரட்சி எனும் வடிவமைப்பில், பிரம்மாண்ட மனித சங்கிலியை மாணவ மாணவிகள் உருவாக்கி தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். இந்நிகழ்வில் கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி பேரா. ஆர். மாணிக்கம், ஆசிரியர் சத்குரு, இயற்கை பவுண்டேசன் நிறுவனர் ம.வினோத் ராஜ், குழுமத்தின் நிர்வாகிகள் அஸ்கர், ராமலிங்கம், கமலி, சரவணகுமார், எட்வின், வெற்றிச்சிலம்பம் ரங்கநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 



மேலும், தமிழ் மரபுவழி இயக்கம் கமலி, குவைத்திலிருந்து ரமேஸ்குமார், மோகன்ராஜ் மற்றும் பலர் மரக்கன்றுகள் வழங்கிட குழுமத்தின் சார்பாக உதவி புரிந்தனர். சமூகநல அமைப்புகளும், தன்னார்வலர்களும் இந்த ஒருவிதை புரட்சியில் இணைந்து பணியாற்ற வரவேற்கப்படுகிறார்கள். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...