கோவை : கோவை ரயில் நிலையம் அருகே ஆந்திரா மாநிலத்தில் இருந்து கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்ய வந்த இருவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கோவை : கோவை ரயில் நிலையம் அருகே ஆந்திரா மாநிலத்தில் இருந்து கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்ய வந்த இருவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கோவை மாநகரில் பெருகி வரும் கஞ்சா விற்பனையைக் கட்டுப்படுத்த மாநகர காவல்துறையினரும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரும் பல்வேறு சோதனைகள் செய்து குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை ரயில் நிலையம் முன்பு சமூகவிரோதிகள் சிலர் கஞ்சா பொருட்களை இளைஞர்கள் மற்றும் மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்ய கொண்டு செல்வதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் விரைந்து சென்ற போலீசார், சந்தேகத்திற்கிடமான இருவரைப் பிடித்து விசாரணை செய்தனர். அதில், இவர்கள் கஞ்சா விற்பனை செய்ய வந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும், போலீசார் தொடர்ந்து விசாரணை செய்ததில், இவர்கள் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த ராமண்ணா என்பவரின் மகன் வந்தல ராஜு (30) மற்றும் சுந்தர் ராவ் என்பவரின் மகன் கொண்டா பாபு (41) என்பதும் தெரியவந்தது. மேலும், அவர்களிடம் இருந்த 40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இந்த கஞ்சாவினை யாரிடம் விற்பனை செய்ய வந்தனர்..?, எப்படி மாணவர்களிடம் விநியோகிக்கின்றனர்...? ஆகிய கோணங்களில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாநகரில் பெருகி வரும் கஞ்சா விற்பனையைக் கட்டுப்படுத்த மாநகர காவல்துறையினரும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரும் பல்வேறு சோதனைகள் செய்து குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை ரயில் நிலையம் முன்பு சமூகவிரோதிகள் சிலர் கஞ்சா பொருட்களை இளைஞர்கள் மற்றும் மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்ய கொண்டு செல்வதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் விரைந்து சென்ற போலீசார், சந்தேகத்திற்கிடமான இருவரைப் பிடித்து விசாரணை செய்தனர். அதில், இவர்கள் கஞ்சா விற்பனை செய்ய வந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும், போலீசார் தொடர்ந்து விசாரணை செய்ததில், இவர்கள் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த ராமண்ணா என்பவரின் மகன் வந்தல ராஜு (30) மற்றும் சுந்தர் ராவ் என்பவரின் மகன் கொண்டா பாபு (41) என்பதும் தெரியவந்தது. மேலும், அவர்களிடம் இருந்த 40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இந்த கஞ்சாவினை யாரிடம் விற்பனை செய்ய வந்தனர்..?, எப்படி மாணவர்களிடம் விநியோகிக்கின்றனர்...? ஆகிய கோணங்களில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.