கோவை : நாட்டுப்புற இசை மற்றும் நடனத்துடன் ஶ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 3 நாள் நடக்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் பாதுகாப்பு திருவிழா இன்று தொடங்கியது.
கோவை : நாட்டுப்புற இசை மற்றும் நடனத்துடன் ஶ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 3 நாள் நடக்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் பாதுகாப்பு திருவிழா இன்று தொடங்கியது.
மேற்கு தொடர்ச்சி மலையின் சட்ட பூர்வமான பாதுகாப்பிற்காக, மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு இயக்கத்துடன் இணைந்து பல்வேறு தன்னார்வ அமைப்புகள் ஒருங்கிணைந்து தேசிய அளவிலான 3 நாள் மாநாடு கோவையில் இன்று தொடங்கியது. கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்த மாநாடானது, நாட்டுப்புற இசையான பறை ஆட்டம் மற்றும் தோடா நடனத்துடன் ஆரம்பமானது.

மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில், மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் கே.சி. மல்கோத்ரா பேசுகையில், "சுமார் 1,800 ஹெக்டோர் பரப்பளவிலான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியினைப் பாதுகாக்க கேரளா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த மக்களும் இங்கு ஒன்று கூடியுள்ளனர். மாவட்டத்தின் எல்லையில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் 4 சதவீதம் வனப்பகுதிகளாகும். அவற்றைப் பாதுகாக்க பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும்," என்றார்.

இதைத் தொடர்ந்து, இயற்கையைப் பாதுகாப்பதில் இளம் தலைமுறையினர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்திய வனஉயிரின கல்வி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஏ.ஜே.டி. ஜான்சிங் கூறினார். மேலும், மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசகர் குமார் கலானந்த் மணி, மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பில் 30 ஆண்டுகள் கடந்து வந்த பாதை குறித்து விளக்கினார்.

இன்று முதல் 3 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில், 6 மாநிலங்களைச் சேர்ந்த இயற்கை, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 1,500 பேருக்கும் மேல் கலந்து கொள்கின்றனர். மேலும், சூழலியல் அறிஞர்கள், பழங்குடியின சமூக செயற்பாட்டாளர்கள், வேளாண்மை, வணிகம், ஊடகம், திரைத்துறை, எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், அரசியல்வாதிகள், இளைஞர்களும் திரளாகப் பங்கேற்கின்றனர்.

மேலும், இந்த மாநாட்டில், மலை பாதுகாப்பு குறித்த கருத்தரங்குகள், விவாத மேடைகள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் பங்கேற்கும் தனித்தனி அமர்வுகள், பழங்குடியினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், இயற்கை விளை பொருள் அங்காடிகள், இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தும் படங்கள் திரையிடல், புகைப்படம், ஓவியக் கண்காட்சிகளும் நடைபெற உள்ளன.
இது குறித்து விழா ஒருங்கிணைப்பாளர் காளிதாசன் கூறும் போது, இந்தக் கருத்தரங்கு அமர்வுகள் தேர்ந்த அறிஞர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. இதில், மேற்கு தொடர்ச்சி மலையைப் பாதுகாப்பது குறித்தும், எல்லைகளில் வனவிலங்கு மற்றும் மனித மோதல்களைக் குறைப்பது குறித்தும், அவற்றின் இருப்பிடத்தினை குறித்தும் கலந்தாலோசிக்கப்படும். அதையடுத்து, அதற்கு அறிவியல்பூர்வமான விளக்கங்கள் கொடுக்கப்படும், என்றார்.

மேற்கு தொடர்ச்சி மலையைக் காக்க ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டில், மேற்கு தொடர்ச்சி மலை குறித்த மாதேவ் காட்கில், கஸ்தூரிரங்கன் போன்றோரின் ஆவணங்கள் விவாதிக்கப்பட உள்ளது. மேலும், ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து கருத்தரங்கின் ஒரு அமர்வில் மாதேவுடன் வீடியோ மூலமாக இணைவது குறித்தும் திட்டமிட்டுள்ளனர். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கோவாவில் இருந்து சட்ட வல்லுநர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேற்கு தொடர்ச்சி மலையின் சட்ட பூர்வமான பாதுகாப்பிற்காக, மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு இயக்கத்துடன் இணைந்து பல்வேறு தன்னார்வ அமைப்புகள் ஒருங்கிணைந்து தேசிய அளவிலான 3 நாள் மாநாடு கோவையில் இன்று தொடங்கியது. கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்த மாநாடானது, நாட்டுப்புற இசையான பறை ஆட்டம் மற்றும் தோடா நடனத்துடன் ஆரம்பமானது.

மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில், மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் கே.சி. மல்கோத்ரா பேசுகையில், "சுமார் 1,800 ஹெக்டோர் பரப்பளவிலான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியினைப் பாதுகாக்க கேரளா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த மக்களும் இங்கு ஒன்று கூடியுள்ளனர். மாவட்டத்தின் எல்லையில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் 4 சதவீதம் வனப்பகுதிகளாகும். அவற்றைப் பாதுகாக்க பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும்," என்றார்.

இதைத் தொடர்ந்து, இயற்கையைப் பாதுகாப்பதில் இளம் தலைமுறையினர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்திய வனஉயிரின கல்வி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஏ.ஜே.டி. ஜான்சிங் கூறினார். மேலும், மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசகர் குமார் கலானந்த் மணி, மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பில் 30 ஆண்டுகள் கடந்து வந்த பாதை குறித்து விளக்கினார்.

இன்று முதல் 3 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில், 6 மாநிலங்களைச் சேர்ந்த இயற்கை, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 1,500 பேருக்கும் மேல் கலந்து கொள்கின்றனர். மேலும், சூழலியல் அறிஞர்கள், பழங்குடியின சமூக செயற்பாட்டாளர்கள், வேளாண்மை, வணிகம், ஊடகம், திரைத்துறை, எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், அரசியல்வாதிகள், இளைஞர்களும் திரளாகப் பங்கேற்கின்றனர்.

மேலும், இந்த மாநாட்டில், மலை பாதுகாப்பு குறித்த கருத்தரங்குகள், விவாத மேடைகள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் பங்கேற்கும் தனித்தனி அமர்வுகள், பழங்குடியினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், இயற்கை விளை பொருள் அங்காடிகள், இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தும் படங்கள் திரையிடல், புகைப்படம், ஓவியக் கண்காட்சிகளும் நடைபெற உள்ளன.
இது குறித்து விழா ஒருங்கிணைப்பாளர் காளிதாசன் கூறும் போது, இந்தக் கருத்தரங்கு அமர்வுகள் தேர்ந்த அறிஞர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. இதில், மேற்கு தொடர்ச்சி மலையைப் பாதுகாப்பது குறித்தும், எல்லைகளில் வனவிலங்கு மற்றும் மனித மோதல்களைக் குறைப்பது குறித்தும், அவற்றின் இருப்பிடத்தினை குறித்தும் கலந்தாலோசிக்கப்படும். அதையடுத்து, அதற்கு அறிவியல்பூர்வமான விளக்கங்கள் கொடுக்கப்படும், என்றார்.

மேற்கு தொடர்ச்சி மலையைக் காக்க ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டில், மேற்கு தொடர்ச்சி மலை குறித்த மாதேவ் காட்கில், கஸ்தூரிரங்கன் போன்றோரின் ஆவணங்கள் விவாதிக்கப்பட உள்ளது. மேலும், ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து கருத்தரங்கின் ஒரு அமர்வில் மாதேவுடன் வீடியோ மூலமாக இணைவது குறித்தும் திட்டமிட்டுள்ளனர். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கோவாவில் இருந்து சட்ட வல்லுநர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.