மக்கள் மறுவாழ்வு திட்டத்தில் பணம் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி : நீலகிரி கண்காணிப்பாளரிடம் புகார் மனு

நீலகிரி : முதுமலை புலிகள் காப்பகத்திட்குட்பட்ட வனப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்களுக்கான மறுவாழ்வு திட்டத்தின் கீழ், ரூ. 10 லட்சம் பெற்றுத்தருவதாகக் கூறி, ரூ. 50 ஆயிரம் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகபிரியாவிடம் புகார் மனு அளித்தனர்.

நீலகிரி : முதுமலை புலிகள் காப்பகத்திட்குட்பட்ட வனப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்களுக்கான மறுவாழ்வு திட்டத்தின் கீழ், ரூ. 10 லட்சம் பெற்றுத்தருவதாகக் கூறி, ரூ. 50 ஆயிரம் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகபிரியாவிடம் புகார் மனு அளித்தனர்.



நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் சுமார் 321 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியாகும். இந்த வனப்பகுதியில் தான் அதிகளவு யானைகள், புலிகள், மான்கள் உட்பட அனைத்து வகையான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில், வனவிலங்குகள் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி முதுமலை புலிகள் காப்பகத்தில் வசிக்கும் 400-க்கும் மேற்பட்ட மக்களுக்கு தலா 10 லட்சம் வழங்கி மறுவாழ்வு திட்டத்தில் அரசாங்கம் வெளியேற்ற அறிவித்தது.



அதன்படி, பந்தலூர் அருகேயுள்ள நெலாக்கோட்டை, கொல்லி, பெண்ணை போன்ற கிராமங்களில் வசித்த 50 குடும்பங்களில், அங்குள்ள சில வழக்கறிஞர்கள் 50 ஆயிரம் பணத்தை பெற்று 10 லட்சம் வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகபிரியாவிடம் புகார் மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...