சின்னத்தம்பியை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட உடுமலை விரைகின்றன கும்கி யானைகள்

திருப்பூர் : உடுமலை பகுதியில் தற்போது முகாமிட்டுள்ள காட்டு யானை சின்னத்தம்பியை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக, டாப்சிலிப் முகாமில் இருந்து கும்கி யானைகள் அழைத்துவரப்படுகின்றன.

திருப்பூர் : உடுமலை பகுதியில் தற்போது முகாமிட்டுள்ள காட்டு யானை சின்னத்தம்பியை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக, டாப்சிலிப் முகாமில் இருந்து கும்கி யானைகள் அழைத்துவரப்படுகின்றன. 



கோவை தடாகம் பகுதியில் விளைநிலங்களை சேதப்படுத்தி வந்த காட்டு யானை சின்னத்தம்பியை, விவசாயிகள் கோரிக்கையை அடுத்து வனத்துறையினர் போராடி பிடித்து சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப் அருகே உள்ள வரகலியாரு வனப்பகுதியில் யானை விடப்பட்டது. இந்த நிலையில், நேற்று அதிகாலை சின்னத்தம்பி பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலகுறிச்சி, ஜெ.ஜெ. நகர், பொங்காலியூர் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய தோட்டங்களிலும், குடியிருப்பு பகுதிக்குள்ளும் வலம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை வனப்பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதற்காக, 30 பேர் கொண்ட வனத்துறையினர் 3 குழுக்களாகப் பிரிந்து, கோபாலபுரம் மலையடிவாரத்தில் உள்ள வனப்பகுதி அருகே வனத்துறையினர் முகாமிட்டு, யானையை வனப்பகுதியில் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். சின்னத்தம்பி யானைக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு இருப்பதால், வனத்துறையினர் இணையதளம் மூலம் அதனை கண்காணித்து வருகின்றனர்.

இன்று உடுமலை அருகே சின்னபாப்பனூத்து, சாலையூர் ஆகிய கிராமங்களில் புகுந்த சின்னத்தம்பி விவசாய நிலங்களில் முகாமிட்டுள்ளது. தற்போது உடுமலை வனத்துறையினரும் சேர்ந்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பலமணி நேரம் போராடியும், யானையை விரட்ட முடியாததால், டாப்சிலிப் வனப்பகுதியிலிருந்து கும்கி யானைகள் வரவழைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து, சின்னதம்பியை விரட்ட கும்கி யானைகள் உடுமலைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றன.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...