கோவையில் உடல்நலம் மற்றும் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு முகாம்

கோவை : கோவை, காரமடை பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உடல்நலம் மற்றும் சுகாதாரம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது.

கோவை : கோவை, காரமடை பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உடல்நலம் மற்றும் சுகாதாரம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. 



கோவை மாவட்டம், திம்மம் பாளையம், காரமடை பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உடல்நலம் மற்றும் சுகாதாரம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அதில், மருத்துவர். சுதாகர் எம்.பி.பி.எஸ், வட்டார மருத்துவ அலுவலர் லிங்கன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சியாமலா, சுகாதார ஆய்வாளர் அருண், சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணி, சுகாதார ஆய்வாளர் திருஞானம், சுகாதார ஆய்வாளர் சாந்தா உள்ளிட்ட பலர் சிறப்புரை வழியாக விழிப்புணர்வு வழங்கினார்கள். 

இந்த முகாமில், சமூக பணியியல் துறையில் பயிலும் மாணவிகள் வெ. ராகவி, பூ. ஓவியா மற்றும் சி.எம்.எஸ் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி சமூக பணியியல் துறை மாணவர்கள் சந்துரு மற்றும் கவிதா, பிஷப் அப்பாசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சமூக பணியியல் துறை மாணவர்கள் விக்னேஷ்வரன் மற்றும் ஜோஸ்மோன் பிரான்சிஸ், ஶ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் கமல்நாத், மற்றும் நல்ல மேய்ப்பர் சுகாதாரக் கல்வி மையம், காரமடையில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து, கிராம மக்களுக்கும் பள்ளி மாணவ மாணவிகள் அனைவருக்கும் சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 



மேலும், இந்த முகாமில் பாரதியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்டு 60 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெற்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...