கோவை : கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இருவேறு பகுதிகளில் சட்டவிரோதமாகப் போதை மாத்திரை விற்பனை செய்த மருந்துக் கடை உரிமையாளர்கள் இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை : கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இருவேறு பகுதிகளில் சட்டவிரோதமாகப் போதை மாத்திரை விற்பனை செய்த மருந்துக் கடை உரிமையாளர்கள் இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் கல்லூரி மாணவர்கள் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கல்லூரி மாணவர்களுக்குப் போதை பொருட்கள் கிடைப்பதை தடுக்கும் பொருட்டு, கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் ஐ.பி.எஸ் மற்றும் மாநகர காவல் துணை ஆணையாளர் சட்டம் - ஒழுங்கு எல்.பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் கோவையில் கஞ்சா, போதை மாத்திரை போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்களை ஒழிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து, தனிப்படை போலீசார் கல்லூரிகளை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, குனியமுத்தூரில் உள்ள ஒரு மருந்துக் கடையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்குப் போதை தரும் மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக குனியமுத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், போலீசார் அந்த மருந்துக் கடையில் திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், அங்கு போதை தரக்கூடிய நைட்ரஸ்சீபம் என்ற மாத்திரை விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, குனியமுத்தூர் இடையர்பாளையத்தைச் சேர்ந்த மருந்துக் கடை உரிமையாளர் மதன் (42), என்பவர் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். அந்த மருந்துக் கடையில் இருந்து 70 போதை தரும் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோலவே, சரவணம்பட்டி வெங்கடேஷ் நகர் பகுதியில் உள்ள ஒரு மருந்துக் கடையில் சோதனை நடத்தியதில் 10 ஆயிரம் போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, மருந்துக்கடை உரிமையாளர் சுப்பிரமணியம் (52), என்பவர் கைது செய்யப்பட்டார். மனநோயாளிகளுக்குத் தூக்கத்துக்கு பயன்படுத்தப்படும் இந்த மாத்திரைகளை மருத்துவரின் சீட்டு இல்லாமல் மருந்துக் கடைகளில் விற்பனை செய்வது சட்டப்படி குற்றம்.
இருப்பினும், சில மருந்துக் கடைகளில் மருந்துக் கடை உரிமையாளர்கள் பணத்திற்காக இந்த மாத்திரைகளை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக, 10 மாத்திரைகள் 32 ரூபாய் இருக்கும் என்றால் இவர்கள் ரூ.500 முதல் ரூ.600 வரையிலும் விற்பனை செய்து வருகின்றனர்.
கோவையில் கல்லூரி மாணவர்கள் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கல்லூரி மாணவர்களுக்குப் போதை பொருட்கள் கிடைப்பதை தடுக்கும் பொருட்டு, கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் ஐ.பி.எஸ் மற்றும் மாநகர காவல் துணை ஆணையாளர் சட்டம் - ஒழுங்கு எல்.பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் கோவையில் கஞ்சா, போதை மாத்திரை போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்களை ஒழிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து, தனிப்படை போலீசார் கல்லூரிகளை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, குனியமுத்தூரில் உள்ள ஒரு மருந்துக் கடையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்குப் போதை தரும் மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக குனியமுத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், போலீசார் அந்த மருந்துக் கடையில் திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், அங்கு போதை தரக்கூடிய நைட்ரஸ்சீபம் என்ற மாத்திரை விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, குனியமுத்தூர் இடையர்பாளையத்தைச் சேர்ந்த மருந்துக் கடை உரிமையாளர் மதன் (42), என்பவர் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். அந்த மருந்துக் கடையில் இருந்து 70 போதை தரும் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோலவே, சரவணம்பட்டி வெங்கடேஷ் நகர் பகுதியில் உள்ள ஒரு மருந்துக் கடையில் சோதனை நடத்தியதில் 10 ஆயிரம் போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, மருந்துக்கடை உரிமையாளர் சுப்பிரமணியம் (52), என்பவர் கைது செய்யப்பட்டார். மனநோயாளிகளுக்குத் தூக்கத்துக்கு பயன்படுத்தப்படும் இந்த மாத்திரைகளை மருத்துவரின் சீட்டு இல்லாமல் மருந்துக் கடைகளில் விற்பனை செய்வது சட்டப்படி குற்றம்.
இருப்பினும், சில மருந்துக் கடைகளில் மருந்துக் கடை உரிமையாளர்கள் பணத்திற்காக இந்த மாத்திரைகளை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக, 10 மாத்திரைகள் 32 ரூபாய் இருக்கும் என்றால் இவர்கள் ரூ.500 முதல் ரூ.600 வரையிலும் விற்பனை செய்து வருகின்றனர்.