திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் : திருப்பூரில் 211 பயனாளிகளுக்கு அமைச்சர் வழங்கல்

திருப்பூர் : தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 211 பயனாளிகளுக்கு, தங்கம் மற்றும் நிதியுதவியினை மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

திருப்பூர் : தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 211 பயனாளிகளுக்கு, தங்கம் மற்றும் நிதியுதவியினை மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார். 



திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி பெற விண்ணப்பிக்கப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

இதில், மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு 211 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் திருமண நிதியுதவி என ரூ.1 கோடியே 40 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில் நம் மாநிலத்தில் திருமண நிதியுதவி, பொங்கல் பரிசு என வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...