திருப்பூரில் 10 நாட்கள் நடக்கும் 16 -வது புத்தகத் திருவிழா தொடக்கம்

திருப்பூர் : 16 -வது புத்தகத்திருவிழாவினை மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

திருப்பூர் : 16 -வது புத்தகத்திருவிழாவினை மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். 



பாரதி புத்தகாலயம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் 16 -வது புத்தகத்திருவிழா திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள பத்மினி கார்டனில் நடைபெற்றது . இந்த கண்காட்சியினை மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார் . 10 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 144 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது . இந்த புத்தகக்கண்காட்சியில் புத்தகம் வாங்குபவர்களுக்கு 10 சதவிகித தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. 



இதில், 1000 -க்கும் மேற்பட்ட தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. சிறப்பாக, இந்தாண்டு பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகள் தங்கள் பாடங்களை யூடியூப் மூலம் கற்றுக்கொள்ள தேவையான உபகரணங்கள் அடங்கிய ஸ்டால், வரலாறு, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. முதல்நாளான நேற்று பறையிசையுடன் தொடக்கவிழா நடைபெற்றது. இந்த விழாவில், சட்டமன்ற உறுப்பினர்கள் தனியரசு குணசேகரன், விஜயகுமார், நடராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். 



இதனிடையே, திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் விழாவிற்கு வர தாமதமானதால், மேடை நிகழ்ச்சிகள் முடிந்த பின் 7 மணியளவில் தொடக்கி வைத்த புத்தகக்கண்காட்சியினை மீண்டும் ரிப்பன் கட்டி அமைச்சர் திறந்துவைத்தார். அப்போது திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் உடனிருந்தார். முன்னதாக, கண்காட்சியினை 5.30 மணியளவில் ரிப்பன் வெட்டி அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...