கோவை : சூலூர் பகுதியில் கடந்த ஆண்டு மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்மணி, திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
கோவை : சூலூர் பகுதியில் கடந்த ஆண்டு மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்மணி, திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம், சூலூர் பள்ளபாளையத்தை சேர்ந்த மோகன் என்பவரின் மனைவி சரண்யா (30). இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கண்ணம்பாளையம் அருகே உள்ள முள் வேலியில் இருசக்கர வாகனத்துடன் உயிரிழந்து கிடந்தார். பின்னர் தகவலறிந்து வந்த சூலூர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக, விபத்து வழக்குப் பதிவு செய்தனர்.
ஆனால், உயிரிழந்த சரண்யாவின் கணவர் மோகன், தனது மனைவி விபத்தில் உயிரிழக்கவில்லை, கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் உள்ளது எனத் தெரிவித்தார். மேலும், இதுதொடர்பாக மீீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினார்.
இதையடுத்து, தனிப்பிரிவில் இருந்து வந்த புகாரின் அடிப்படையில் சூலூர் போலீசார் மீண்டும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்தனர். இதில், சந்தேகத்துக்கிடமாக விருதுநகரைச் சேர்ந்த காளிராஜ் (34), என்பவரை கைது செய்தனர்.
மேலும், போலீசார் காளிராஜ் இடம் விசாரணை செய்ததில் மோகன் - சரண்யா தம்பதியர் சிவகாசியில் வசித்த போது, காளிராஜ் அறிமுகமாகியுள்ளார். அதன்பின்னர், தம்பதியர் சூலூருக்கு வந்து விட்டனர். இதையறிந்த காளிராஜ் சூலூருக்கு வந்தும், சரண்யாவை தொந்தரவு செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட பிரச்சினையால் காளிராஜ், சரண்யாவை வேனை மோதி கொலை செய்திருக்கிறார்.
இந்த கொலையை, விபத்து போல் சித்தரித்து இருக்கலாம் விசாரணையில் தெரிய வருகிறது. இதுதொடர்பாக, தொடர்ந்து சூலூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம், சூலூர் பள்ளபாளையத்தை சேர்ந்த மோகன் என்பவரின் மனைவி சரண்யா (30). இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கண்ணம்பாளையம் அருகே உள்ள முள் வேலியில் இருசக்கர வாகனத்துடன் உயிரிழந்து கிடந்தார். பின்னர் தகவலறிந்து வந்த சூலூர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக, விபத்து வழக்குப் பதிவு செய்தனர்.
ஆனால், உயிரிழந்த சரண்யாவின் கணவர் மோகன், தனது மனைவி விபத்தில் உயிரிழக்கவில்லை, கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் உள்ளது எனத் தெரிவித்தார். மேலும், இதுதொடர்பாக மீீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினார்.
இதையடுத்து, தனிப்பிரிவில் இருந்து வந்த புகாரின் அடிப்படையில் சூலூர் போலீசார் மீண்டும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்தனர். இதில், சந்தேகத்துக்கிடமாக விருதுநகரைச் சேர்ந்த காளிராஜ் (34), என்பவரை கைது செய்தனர்.
மேலும், போலீசார் காளிராஜ் இடம் விசாரணை செய்ததில் மோகன் - சரண்யா தம்பதியர் சிவகாசியில் வசித்த போது, காளிராஜ் அறிமுகமாகியுள்ளார். அதன்பின்னர், தம்பதியர் சூலூருக்கு வந்து விட்டனர். இதையறிந்த காளிராஜ் சூலூருக்கு வந்தும், சரண்யாவை தொந்தரவு செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட பிரச்சினையால் காளிராஜ், சரண்யாவை வேனை மோதி கொலை செய்திருக்கிறார்.
இந்த கொலையை, விபத்து போல் சித்தரித்து இருக்கலாம் விசாரணையில் தெரிய வருகிறது. இதுதொடர்பாக, தொடர்ந்து சூலூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.