கோவை : அன்னூரை சேர்ந்த கோழிக்கடை உரிமையாளரை ஒரிசாவை சேர்ந்தவர் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை : அன்னூரை சேர்ந்த கோழிக்கடை உரிமையாளரை ஒரிசாவை சேர்ந்தவர் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், அன்னூர் கணேசபுரத்தை சேர்ந்தவர் சிவசாமி(47). இவர் அதே பகுதியில் கோழி கடை நடத்தி வருகிறார். இன்று வீட்டருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த ஒரு இளைஞர், திடீரென சிவசாமி வீட்டுக்குள் நுழைய முயன்றார். இதைப் பார்த்த அவர், அந்த நபரைச் சத்தம் போட்டு திருப்பி அனுப்பியுள்ளார்.
இதையடுத்து, அந்த நபர், அருகேயிருந்த தென்னை மட்டையை எடுத்து சிவசாமியின் பின்புற தலையில் சரமாரியாக அடித்தார். இதில் மயங்கிய அவரை, அருகேயிருந்தவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே சிவசாமியை தாக்கிய நபரை, அக்கம் பக்கத்தினர் பிடித்து அன்னூர் போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர் ஒரிசாவைச் சேர்ந்த மனோஜ்யாக்ரா (35), எனத் தெரியவந்தது. மனோஜ் யாக்ரா மீது கொலை வழக்குப்பதிந்து அன்னூர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.