நீலகிரி : குன்னூர் அருகே, அதிகரட்டியில் கிணற்றில் விழுந்த காட்டெருமையை விவசாயிகள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
நீலகிரி : குன்னூர் அருகே, அதிகரட்டியில் கிணற்றில் விழுந்த காட்டெருமையை விவசாயிகள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
குன்னுார் அதிகரட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தேயிலை மற்றும் காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, அதிக பரப்பளவில், மலைக் காய்கறிகளான, கேரட், முட்டைகோஸ், பீன்ஸ், உருளைக்கிழங்கு மற்றும் பீட்ரூட் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது வறட்சி நிலவுவதால், இப்பகுதி விவசாயிகள் கூடுமானவரை, கிணறுகளில் தண்ணீரை சேமித்து, பயிர்களுக்கு பாய்ச்சி வருகின்றனர்.

இப்பகுதியை சுற்றிலும், வனம் மற்றும் அதனையொட்டி, தேயிலை தோட்டங்கள் நிறைந்துள்ள காரணத்தால்,காட்டெருமை, கரடி மற்றும் சிறுத்தை போன்ற வன விலங்குகள் அதிகளவில் வந்து செல்கின்றது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டெருமை, தேயிலை தோட்டங்களில் பதுங்கி, அவ்வப்போது, தண்ணீர் தேவைக்காக, காய்கறித் தோட்டங்களில் வந்து செல்வதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில், காட்டெருமை, மேய்ச்சலில் இருந்தபோது அங்கிருந்த எட்டடி உயரம் உள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளது.

இதையடுத்து, அதிகாலையில், தோட்டத்தைப் பார்க்கவந்த விவசாயி ஒருவர், காட்டெருமை கிணற்றில் விழுந்திருந்ததையும், சேற்றில் இருந்து வெளியேற முடியாமல் போராடியதையும் கண்டு, அந்த பகுதி மக்களுக்குத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து,விவசாயிகள் இணைந்து சேற்றில் சிக்கிய காட்டெருமையை பத்திரமாக வெளியே கொண்டுவர, கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றி வழியை ஏற்படுத்தியுள்ளனர். அதன்பின், காட்டெருமை பத்திரமாக வெளிக்கொண்டு வரப்பட்டது.
குன்னுார் அதிகரட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தேயிலை மற்றும் காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, அதிக பரப்பளவில், மலைக் காய்கறிகளான, கேரட், முட்டைகோஸ், பீன்ஸ், உருளைக்கிழங்கு மற்றும் பீட்ரூட் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது வறட்சி நிலவுவதால், இப்பகுதி விவசாயிகள் கூடுமானவரை, கிணறுகளில் தண்ணீரை சேமித்து, பயிர்களுக்கு பாய்ச்சி வருகின்றனர்.

இப்பகுதியை சுற்றிலும், வனம் மற்றும் அதனையொட்டி, தேயிலை தோட்டங்கள் நிறைந்துள்ள காரணத்தால்,காட்டெருமை, கரடி மற்றும் சிறுத்தை போன்ற வன விலங்குகள் அதிகளவில் வந்து செல்கின்றது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டெருமை, தேயிலை தோட்டங்களில் பதுங்கி, அவ்வப்போது, தண்ணீர் தேவைக்காக, காய்கறித் தோட்டங்களில் வந்து செல்வதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில், காட்டெருமை, மேய்ச்சலில் இருந்தபோது அங்கிருந்த எட்டடி உயரம் உள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளது.

இதையடுத்து, அதிகாலையில், தோட்டத்தைப் பார்க்கவந்த விவசாயி ஒருவர், காட்டெருமை கிணற்றில் விழுந்திருந்ததையும், சேற்றில் இருந்து வெளியேற முடியாமல் போராடியதையும் கண்டு, அந்த பகுதி மக்களுக்குத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து,விவசாயிகள் இணைந்து சேற்றில் சிக்கிய காட்டெருமையை பத்திரமாக வெளியே கொண்டுவர, கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றி வழியை ஏற்படுத்தியுள்ளனர். அதன்பின், காட்டெருமை பத்திரமாக வெளிக்கொண்டு வரப்பட்டது.