நீலகிரி : உதகை பிரிக்ஸ் பள்ளி முதல்வர் நேதாஜி மரணம் குறித்து உரிய விசாரணை செய்ய வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பூங்கா சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி : உதகை பிரிக்ஸ் பள்ளி முதல்வர் நேதாஜி மரணம் குறித்து உரிய விசாரணை செய்ய வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பூங்கா சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உதகை பிரிக்ஸ் பள்ளி முதல்வர் காலை வாக்கிங் போகும் போது நெஞ்சுவலி ஏற்பட்டதால் உதகை காவல் துணை கண்காணிப்பாளர் திருமேனி 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்குத் தொடர் சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் அவர் இறந்துவிட்டார். தகவல் அறிந்த பிரிக்ஸ் பள்ளி மாணவ, மாணவிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனிடையே, அதே சாலையில் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் ஆளுநரின் மண்வள கருத்தரங்கு நடைபெறும் நேரம் என்பதால் உடனடியாக உயரதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் உத்தரவிற்கு இணங்கச் சாலைமறியலில் ஈடுபட்ட மாணவர்கள் அகற்றப்பட்டனர். இது குறித்து காவல் அதிகாரிகள் கூறும் போது உடற்கூறு ஆய்வு அறிக்கை கிடைத்ததும், உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும், என்றார்.


உதகை பிரிக்ஸ் பள்ளி முதல்வர் காலை வாக்கிங் போகும் போது நெஞ்சுவலி ஏற்பட்டதால் உதகை காவல் துணை கண்காணிப்பாளர் திருமேனி 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்குத் தொடர் சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் அவர் இறந்துவிட்டார். தகவல் அறிந்த பிரிக்ஸ் பள்ளி மாணவ, மாணவிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனிடையே, அதே சாலையில் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் ஆளுநரின் மண்வள கருத்தரங்கு நடைபெறும் நேரம் என்பதால் உடனடியாக உயரதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் உத்தரவிற்கு இணங்கச் சாலைமறியலில் ஈடுபட்ட மாணவர்கள் அகற்றப்பட்டனர். இது குறித்து காவல் அதிகாரிகள் கூறும் போது உடற்கூறு ஆய்வு அறிக்கை கிடைத்ததும், உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும், என்றார்.
