கோவை : கோவையில் காணாமல் போன சிறுமிகளின் விவகாரத்தில் முறையான வழக்குப்பதிவு செய்யாத காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, குழந்தைகளின் பெற்றோர் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
கோவை : கோவையில் காணாமல் போன சிறுமிகளின் விவகாரத்தில் முறையான வழக்குப்பதிவு செய்யாத காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, குழந்தைகளின் பெற்றோர் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி, ரவி ஆகிய தம்பதியின் மகள்கள் சுபாஷினி (15), மற்றும் கார்த்தி (13). இவர்கள் இருவரும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டனர். இதையடுத்து, அவர்களது பெற்றோர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கடுத்ததாக, காணாமல் போன இருவரும் 7 நாட்களுக்குப் பிறகு காவல் நிலையத்தில் சில மர்ம நபர்களால் காரிலிருந்து இறக்கிவிடப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, இந்த மர்ம நபர்கள் யார் என்றும், அவர்கள் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கலாம்? என்றும் பெற்றோர்கள் சந்தேகிக்கின்றனர். எனவே, இது தொடர்பாக சூலூர் காவல்துறையிடம் தங்களது குழந்தைகளை மருத்துவ பரிசோதனை செய்யப் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், சூலூர் காவல்துறை இந்தச் சம்பவத்தில் முன்னுக்குப்பின் முரணாகச் செயல்படுகின்றனர். இதுவரையிலும், குழந்தைகளுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.
இது குறித்து சிறுமிகளின் பெற்றோர், காப்பகத்தில் இருக்கும் குழந்தைகளிடம் பேசவிடாமல் காவல்துறையினர் தடுப்பதாகவும், தகாத வார்த்தைகளில் அவர்களைத் திட்டுவதாகவும் கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர். மேலும், தன் பிள்ளைகளை மீட்டுக் கொடுத்து குற்றவாளிகளைக் கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.