உதகையில் தேசிய அறிவியல் கருத்தரங்கை தொடங்கி வைத்தார் ஆளுநர்

நீலகிரி : உதகையில் இந்திய மண் வள பாதுகாப்பு சங்கத்தின் 28 -வது தேசிய கருத்தரங்கை இன்று தமிழக ஆளுநர் திரு பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.

நீலகிரி : உதகையில் இந்திய மண் வள பாதுகாப்பு சங்கத்தின் 28 -வது தேசிய கருத்தரங்கை இன்று தமிழக ஆளுநர் திரு பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். 



இந்நிகழ்வில் அவர் பேசியதாவது :- மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், இந்தியாவை மேம்படுத்தவும் உதவுகிறது. இதை கருத்தில் கொண்டு தான் 1929 -ம் ஆண்டு இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ஏற்படுத்தப்பட்டு 103 மண்டல மையங்கள் மூலம் வேளாண் ஆராய்ச்சி, கல்வி, விரிவாக்கத் திட்டங்கள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வருவகிறது. 

பருவநிலை மாற்றங்களால் மண்ணின் தரத்தை மதிப்பீடு செய்து அதிலுள்ள சத்து மற்றும் தாது குறைபாடுகளை கண்டறிந்து அதற்கேற்ற பரிந்துரைகளை இம்மையங்கள் அளித்து வருகின்றன. இந்தியாவில் மண் வள குறைபாடு 147 மில்லியன் எக்டேரிலும், 94 மில்லியன் எக்டேரில் நீராலும், 9 மில்லியன் எக்டேரில் காற்று மற்றும் 6 மில்லியன் எக்டேரில் தாது குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா 18% உலக மக்களையும், 15% உலக கால்நடைகளையும் பாதுகாத்து வருகிறது. ஆனால், உலகளவில் 2.4% நிலப்பரப்பே இந்தியாவில் உள்ளது. உலகில் மக்கள் தொகை பெருக்கத்தால் தண்ணீர் தட்டுபாடு வேகமாக உயர்ந்து வருகிறது. சுமார் 1.2 பில்லியன், உலக மக்கள் அதாவது ஐந்தில் ஒரு பங்கு உலக மக்கள் தண்ணீர் தட்டுபாடு நிலவும் மண்டலத்தில் வாழ்கின்றனர். 

கடந்த 200 ஆண்டுகளில் வேளாண் துறையில் நாம் அடைந்துள்ள தொழில் நுட்ப சாகுபடி முறைகளால் நமது வாழ்க்கை தரம் உயர்ந்திருக்கிறது. இந்த கருத்தரங்கில் பங்கேற்றுள்ள விஞ்ஞானிகள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்ட வேளாண் துறையில் சாதனைகளை எட்டி விவசாயிகளுக்கு சென்று சேர்க்க வேண்டும்," என்றார். 

இதனைத் தொடர்ந்து, ஆளுநர் மண் மற்றும் நீர் வளம் தொடர்பான விழா மலரை வெளியிட்டார். மேலும், வேளாண் துறையில் பல்வேறு சாதனைகளை படைத்த 28 விஞ்ஞானிகளுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளையும் வழங்கினார். கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் இன்ன சென்ட் திவ்யா, முன்னாள் இந்திய அணுசக்தி ஆணையம் தலைவர் எம்.ஆர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 



இதையடுத்து, உதகை மத்திய பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், தூய்மைப் பணிகளை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் முன்னிலையில் தூய்மை பாரத உறுதி மொழியை ஆளுநர் செய்து வைத்தார். மேலும், தூய்மை பாரத ரத வாகனத்தையும் ஆளுநர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...