Exclusive: கோவையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு 'கட்' அடிக்கும் அதிகாரிகள்

கோவை : விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் சொற்ப அளவிலான துறை அதிகாரிகளே கலந்துகொள்வதால் தங்களது கோரிக்கைகளை முழுவதுமாக விவாதிக்க இயலாத நிலை உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.


கோவை : விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் சொற்ப அளவிலான துறை அதிகாரிகளே கலந்துகொள்வதால் தங்களது கோரிக்கைகளை முழுவதுமாக விவாதிக்க இயலாத நிலை உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். 

கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) துரை.ரவிச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு விவசாய சங்கங்களும் விவசாயிகளும் கலந்து கொண்டு தங்களின் குறைகளை அதிகாரிகளிடம் மனுவாக அளித்தனர். 



இக்கூட்டத்தில், வருவாய்துறை மற்றும் காவல்துறையினர் விவசாயிகளை மிரட்டி உயர்மின்கோபுரம் அமைக்கும் பணியை மேற்கொள்வதை நிறுத்த வேண்டும். உயர்மின் இணைப்புகளைத் தரை வழியாகக் கொண்டு செல்ல வேண்டும். நீர் வழித்தடங்களை ஆக்கிரமிப்பு செய்து கட்டியுள்ள வீட்டுமனை விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும், விவசாயிகள் விரும்பும் நிறுவனங்கள் மூலம் கருவிகள் பெற அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் மனுவாக அளித்தனர். இந்நிலையில், பெறப்பட்ட மனு குறித்து விவாதித்து விளக்கமளிக்க பெரும்பாலான துறை அதிகாரிகள் வராததால், புகாரளிக்க வந்த விவசாயிகள் கொந்தளித்தனர். 



இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிச்சாமி கூறுகையில், "விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் 32 துறை அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும். ஆனால், மிக சொற்பமான அதிகாரிகள் தான் கலந்து கொள்கின்றனர். இதனால், விவசாயிகளின் பிரச்சனைகளையும், குறைகளையும் அதிகாரிகளிடம் விவாதிக்க இயலாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. 

குறிப்பாக, பிரச்சனைக்குரிய துறை அதிகாரிகள் கலந்துகொள்ளாததால் விவசாயிகளின் பிரச்சனைகளும், கோரிக்கைகளும் தொடர்கதையாகி வருகின்றது. வருங்காலங்களில் இதுபோன்ற நிலையை மாவட்ட நிர்வாகம் மாற்றிக் கொள்ள வேண்டும்", என்றார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...