கோவை : பயிர் சேதம் விளைவித்ததாகக் கூறி ஆனைமலைக்கு அனுப்பப்பட்ட காட்டுயானை சின்னத்தம்பி அங்கலக்குறிச்சிக்குள் நுழைந்துள்ளது.
கோவை : பயிர் சேதம் விளைவித்ததாகக் கூறி ஆனைமலைக்கு அனுப்பப்பட்ட காட்டுயானை சின்னத்தம்பி அங்கலக்குறிச்சிக்குள் நுழைந்துள்ளது.
தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு சின்னதம்பி, விநாயகன் ஆகிய இரண்டு காட்டு யானைகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்ததாகப் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கைக்குப் பின்னர், கடந்த டிசம்பர் மாதம் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு விநாயகன் யானை, முதுமலை வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.

இந்நிலையில், கோவை தடாகம் பகுதியில் இருந்து கடந்த 25 -ம் தேதி சின்னத்தம்பி கும்கி யானைகளின் உதவியோடு வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது. அங்கிருந்து, லாரி மூலமாக ஆனைமலை, வரகளியாறு வனப்பகுதிக்குள் சின்னத்தம்பி விடப்பட்டது.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக சின்னத்தம்பி தற்போது அருகிலிருக்கும் அங்கலக்குறிச்சி எனும் ஊருக்குள் புகுந்துள்ளது. இதையடுத்து, அதனை மீண்டும் காட்டுக்குள் அனுப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.