கோவையில் பயங்கரம் : கல்லூரி மாணவரைச் சரமாரியாக குத்திக் கொலை செய்த மர்ம நபர்கள்

கோவை : உக்கடம் அருகே உள்ள கெம்பட்டி காலனி பகுதியில் கல்லூரி மாணவரை மர்ம நபர்கள் சரமாரியாக கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : உக்கடம் அருகே உள்ள கெம்பட்டி காலனி பகுதியில் கல்லூரி மாணவரை மர்ம நபர்கள் சரமாரியாக கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை, உக்கடம் அருகே உள்ள கெம்பட்டிகாலனி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் முரளிதரன் (21). இவர் ஹிந்துஸ்தான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.எஸ்.சி., (ஐ டி) படித்து வருகிறார். நேற்று இரவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு குழுவினர் அவரைக் கல்லால் தாக்கியுள்ளனர். 

இந்த தாக்குதலை சுதாரித்துக் கொண்ட மாணவர் முரளிதரன் தப்பி ஓடும் பொழுது மறைந்திருந்த நபர்கள் மார்பில் நெஞ்சு பகுதியிலும், உடம்பின் பல்வேறு பகுதியிலும் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். இதில், முரளிதரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்தச் சம்பவம் தொடர்பாக பாலாஜி என்பவரை போலீசார் விசாரணை செய்தனர். 

இந்த விசாரணையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இரு தரப்பினர்களுக்கு இடையே அடிதடி ஏற்பட்டுள்ளதாகவும், இந்த அடிதடியை முரளிதரன் தடுத்து வைத்துள்ளதாகவும் தெரியவந்ததுள்ளது. இந்த முன் விரோதத்தால் முரளிதரன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பெரியகடைவீதி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...