கோவை : கோவையில் மக்கள் அதிகம் கூடும் பகுதியான கோவை ரயில்நிலையத்தில் மருத்துவ முதலுதவி மையம் இன்று திறக்கப்பட்டது.
கோவை : கோவையில் மக்கள் அதிகம் கூடும் பகுதியான கோவை ரயில்நிலையத்தில் மருத்துவ முதலுதவி மையம் இன்று திறக்கப்பட்டது.

ராயல்கேர் மருத்துவமனை சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த முதலுதவி மையத்தை அம்மருத்துவமனையில் தலைவர் கே. மாதேஸ்வரன், கோவை ரயில்நிலைய இயக்குநர் பி. சதீஷ் சரவணன் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த முதலுதவி மையத்தில் அவசர காலத்தின் போது தேவைப்படும் உபகரணங்களும், ஈ.சி.ஜி. மானிட்டர்ஸ், எஸ்.பி.ஓ.2 மானிட்டர்ஸ் மற்றும் உயிர்களைக் காக்க உதவும் மருந்துகளும் வைக்கப்பட்டுள்ளன.

"கோவை ரயில்நிலையத்தில் அனுபமிக்க, தரம் வாய்ந்த செவிலியர் தலைமையிலான குழு, ஆபத்தில் உள்ளவர்களுக்கு முதலுதவி சிகிச்சையளிப்பதற்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்," என்றார் ராயல்கேர் மருத்துவமனை தலைவர் கே. மாதேஸ்வரன்.
இந்த மருத்துவ முதலுதவி மையத்தின் திறப்பு விழாவில், தலைமை வர்த்தக ஆய்வாளர் சிட்டிபாபு, ரயில்நிலைய வர்த்தக மேலாளர் லாரன்ஸ், ராயல்கேர் மருத்துவமனையின் முதன்மை இயக்க அலுவலர் பி. கிருஷ்ணாநந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ராயல்கேர் மருத்துவமனை சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த முதலுதவி மையத்தை அம்மருத்துவமனையில் தலைவர் கே. மாதேஸ்வரன், கோவை ரயில்நிலைய இயக்குநர் பி. சதீஷ் சரவணன் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த முதலுதவி மையத்தில் அவசர காலத்தின் போது தேவைப்படும் உபகரணங்களும், ஈ.சி.ஜி. மானிட்டர்ஸ், எஸ்.பி.ஓ.2 மானிட்டர்ஸ் மற்றும் உயிர்களைக் காக்க உதவும் மருந்துகளும் வைக்கப்பட்டுள்ளன.

"கோவை ரயில்நிலையத்தில் அனுபமிக்க, தரம் வாய்ந்த செவிலியர் தலைமையிலான குழு, ஆபத்தில் உள்ளவர்களுக்கு முதலுதவி சிகிச்சையளிப்பதற்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்," என்றார் ராயல்கேர் மருத்துவமனை தலைவர் கே. மாதேஸ்வரன்.
இந்த மருத்துவ முதலுதவி மையத்தின் திறப்பு விழாவில், தலைமை வர்த்தக ஆய்வாளர் சிட்டிபாபு, ரயில்நிலைய வர்த்தக மேலாளர் லாரன்ஸ், ராயல்கேர் மருத்துவமனையின் முதன்மை இயக்க அலுவலர் பி. கிருஷ்ணாநந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.