தமிழகத்தில் வருகிற மே மாதம் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு

தமிழகத்தில் வருகிற மே மாதம் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் தெரிவித்தார்.

தமிழகத்தில் வருகிற மே மாதம் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தல் ஆயத்த பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள பெரம்பலூருக்கு வந்திருந்த தமிழக மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது :- தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு மே மாத இறுதியில் வெளியிடப்படும். அதாவது, நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கைகள் முடிவடைந்த பிறகு, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும். ஜூன் அல்லது ஜுலை மாதத்தில் மறைமுக தேர்தல் நடைபெறலாம்.

வாக்காளர்கள் ஓட்டளித்து தங்களது பிரதிநிதிகளை தேர்வு செய்யும் நேரடி தேர்தல் மற்றும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் வாக்களித்து உள்ளாட்சி அமைப்புகளின் துணைத் தலைவர்களை தேர்வு செய்யும் மறைமுக தேர்தல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் ஜூலைக்குள் முடிவடைந்துவிடும்.

உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருப்பது மற்றும் வாக்காளர் பட்டியல் விபரம் தயார் செய்தல் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதுவரை தமிழகம் முழுவதும் 22 மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டங்கள் முடிவடைந்துள்ளது. மேலும், 10 மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...