திருப்பூர் : திருப்பூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனை செவிலியர்கள் கருப்பு பட்டயம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் : திருப்பூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனை செவிலியர்கள் கருப்பு பட்டயம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூரில் ஜாக்டோ - ஜியோ அரசு அமைப்பினர் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ பொறுப்பாளர்களை காவல்துறையினர் கைது செய்ததைக் கண்டித்தும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை செவிலியர்கள் கருப்பு பட்டயம் அணிந்து போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றி வரும் 120 செவிலியர்கள் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்யும் வகையில், பணியில் விடுப்பு இல்லாமல் இன்று முதல் 3 நாட்களுக்கு கருப்பு பட்டயம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.
திருப்பூரில் ஜாக்டோ - ஜியோ அரசு அமைப்பினர் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ பொறுப்பாளர்களை காவல்துறையினர் கைது செய்ததைக் கண்டித்தும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை செவிலியர்கள் கருப்பு பட்டயம் அணிந்து போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றி வரும் 120 செவிலியர்கள் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்யும் வகையில், பணியில் விடுப்பு இல்லாமல் இன்று முதல் 3 நாட்களுக்கு கருப்பு பட்டயம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.