கோவை : விவசாயத் தோட்டத்தில் போடப்பட்ட மின்சாரவேலியின் மின்சாரம் தாக்கியதால் காட்டு யானை உயிரிழந்த வழக்கில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு விவசாயிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை : விவசாயத் தோட்டத்தில் போடப்பட்ட மின்சாரவேலியின் மின்சாரம் தாக்கியதால் காட்டு யானை உயிரிழந்த வழக்கில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு விவசாயிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பெரியநாயக்கன் பாளையம் வனக்கோட்டத்திற்குட்பட்ட தனது பட்டா நிலத்தில், கே. ராஜு என்பவர் மின்சார வேலி அமைத்திருந்தார். இந்த நிலையில், கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி அந்த வழியாக வந்த காட்டு யானை ஒன்று, அந்த மின்சார வேலியை தொட முயன்ற போது, மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர், போதிய ஆதாரங்களை திரட்டி கோவை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இந்த வழக்கில், 3 ஆண்டுகள் சிறை தண்டனைன விதித்து கடந்த 2014-ம் ஆண்டு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து கே. ராஜு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, விவசாயிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தனர். மேலும், அபராதத் தொகையை கட்டத் தவறினால், கூடுதலாக 2 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த தீர்ப்பை வரவேற்ற வனஆர்வலர்கள் மற்றும் இயற்கை அமைப்பினர், வனத்துறையினருக்குப் பாராட்டு தெரிவித்தனர். மேலும், இதுபோன்ற தீர்ப்பு, வரும் காலத்தில் விலங்குகளின் உயிருக்கு ஆபத்தான மின்சார வேலிகளை அமைக்கும் விவசாயிகளுக்கு ஒருபாடமாக இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
பெரியநாயக்கன் பாளையம் வனக்கோட்டத்திற்குட்பட்ட தனது பட்டா நிலத்தில், கே. ராஜு என்பவர் மின்சார வேலி அமைத்திருந்தார். இந்த நிலையில், கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி அந்த வழியாக வந்த காட்டு யானை ஒன்று, அந்த மின்சார வேலியை தொட முயன்ற போது, மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர், போதிய ஆதாரங்களை திரட்டி கோவை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இந்த வழக்கில், 3 ஆண்டுகள் சிறை தண்டனைன விதித்து கடந்த 2014-ம் ஆண்டு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து கே. ராஜு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, விவசாயிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தனர். மேலும், அபராதத் தொகையை கட்டத் தவறினால், கூடுதலாக 2 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த தீர்ப்பை வரவேற்ற வனஆர்வலர்கள் மற்றும் இயற்கை அமைப்பினர், வனத்துறையினருக்குப் பாராட்டு தெரிவித்தனர். மேலும், இதுபோன்ற தீர்ப்பு, வரும் காலத்தில் விலங்குகளின் உயிருக்கு ஆபத்தான மின்சார வேலிகளை அமைக்கும் விவசாயிகளுக்கு ஒருபாடமாக இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.