கோவை : 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 9-வது நாளாக தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை : 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 9-வது நாளாக தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் 21 மாத ஊதிய நிலுவை மற்றும் பழைய பென்சன் திட்டம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் கடந்த 21-ம் தேதி முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு கடுமையான நிபந்தனைகளை தமிழக அரசு விதித்ததால், 95 சதவீதத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் இன்றைக்குப் பணிக்கு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில், 9-வது நாளாக அரசு ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அரசிற்கு எதிராகக் கண்டன கோசங்களை எழுப்பினர். மேலும், இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி, மாவட்ட நீதிபதிகள் ஆகியோர் 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை பெற்றுக்கொண்டு, ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் இருப்பதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதாக குற்றம்சாட்டினார். இந்தப் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.