ராகுல், பிரியங்கா என யார் வந்தாலும் மோடியை அசைக்க முடியாது - திருப்பூரில் தமிழிசை பேச்சு

திருப்பூர் : காங்கிரஸ் பொய்யான வாக்குறுதிகளைக் கூறிவருவதாகவும், ராகுல், பிரியங்கா என யார் வந்தாலும் மோடியை அசைக்க முடியாது எனவும் திருப்பூரில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.

திருப்பூர் : காங்கிரஸ் பொய்யான வாக்குறுதிகளைக் கூறிவருவதாகவும், ராகுல், பிரியங்கா என யார் வந்தாலும் மோடியை அசைக்க முடியாது எனவும் திருப்பூரில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார். 



திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியில், பிப்ரவரி 10 -ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பாஜக பிரதமர் மோடி பங்கேற்று பேசவுள்ளார். இந்த பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள இடத்திற்கான கால்கோள் விழா திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியில் உள்ள வாஜ்பாய் திடலில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர், கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். அப்போது, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். 



அவர் பேசியதாவது ;- மோடியின் ஆட்சி வளர்ச்சியின் ஆட்சி. தற்போது, வாக்குச் சாவடி அளவிற்கு பலம் பொருந்தியவர்களாக மாறி வருகிறோம். அதனால் தான் மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற கருத்தை வலியுறுத்துகிறோம். நான்கரை ஆண்டுகளில் மோடியின் சாதனை அளப்பரியது. பொய்வாக்குறுதிகளை காங்கிரஸ் வழங்கி வருகிறது. ராகுல், பிரியங்கா என யார் வந்தாலும் மோடியை அசைக்க முடியாது. 

எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மத்திய அமைச்சரவை ரூ.1300 கோடி ஒதுக்கியுள்ளது. 48 மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் இயங்கும். ஸ்டாலின் நிலை தடுமாறி பேசுகிறார். ஆறுமுக சாமி ஆணையத்தில் மோடியை விசாரிக்கச் சொல்கிறார். எதைப் பேசுகிறோம் என்று ஸ்டாலினுக்கு தெரியவில்லை. வரம்பு மீறிப் பேசி வருகிறார். அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

மேலும், இன்றைய சூழலில் ஆசிரியர்கள் பணிக்கு திரும்புவதே நல்லது. எதிர்க்கட்சிகள் மாற்றுச் சக்திகளை போராடத் தூண்டப்படக்கூடாது. போராடுபவர்கள் தமிழகத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொள்ள வேண்டும். திருநாவுக்கரசர் நப்பாசையில் உள்ளார். 

நாங்கள் விட்டுக் கொடுத்து வாங்கும் நிலமையில் தான் காங்கிரஸ் கட்சி உள்ளது. பிரதமர் வேட்பாளர் பலம் பொருந்தியவர். கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் ஆரம்பிக்க வில்லை. அதற்குள்ளாக, சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள், இவ்வாறு அவர் பேசினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...