கோவை : கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் மத்திய அரசின் சார்பில் திறன் மேம்பாட்டு மையம் அமைக்க ரூ.2.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கோவை : கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் மத்திய அரசின் சார்பில் திறன் மேம்பாட்டு மையம் அமைக்க ரூ.2.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அவினாசி சாலையில் உள்ள கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் மருத்துவத்துறையில் தங்கள் திறனை மேலும் வளர்த்துக்கொள்ளும் விதமாக மத்திய அரசின் சார்பில் திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி கோவை மற்றும் மதுரையில் திறன் மேம்பாட்டு மையம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
அதன்படி, தற்போது திறன் மேம்பாட்டு மைய கட்டிடம் அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விவரங்களும் வெளியாகியுள்ளது. அதில் கூறியுள்ளபடி, கட்டிடம் அமைக்க ரூ.1.1 கோடி, பெரிய அளவிலான உபகரணங்களுக்கு ரூ.1.3 கோடி, சிறிய அளவிலான உபகரணங்கள் வாங்க ரூ.88 ஆயிரம், மற்றும் மற்ற உபகரணங்களுக்கு ரூ.18 லட்சம் என்று மொத்தம் ரூ.2.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவினாசி சாலையில் உள்ள கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் மருத்துவத்துறையில் தங்கள் திறனை மேலும் வளர்த்துக்கொள்ளும் விதமாக மத்திய அரசின் சார்பில் திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி கோவை மற்றும் மதுரையில் திறன் மேம்பாட்டு மையம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
அதன்படி, தற்போது திறன் மேம்பாட்டு மைய கட்டிடம் அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விவரங்களும் வெளியாகியுள்ளது. அதில் கூறியுள்ளபடி, கட்டிடம் அமைக்க ரூ.1.1 கோடி, பெரிய அளவிலான உபகரணங்களுக்கு ரூ.1.3 கோடி, சிறிய அளவிலான உபகரணங்கள் வாங்க ரூ.88 ஆயிரம், மற்றும் மற்ற உபகரணங்களுக்கு ரூ.18 லட்சம் என்று மொத்தம் ரூ.2.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.