திருப்பூர் : திருப்பூரில் வரும் பிப்., 10 -ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள இடத்தை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.
திருப்பூர் : திருப்பூரில் வரும் பிப்., 10 -ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள இடத்தை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.
பிப்ரவரி 10 -ம் தேதி திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியில் பாஜக சார்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பாரத பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். அந்த பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள இடத்தை மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியின் போது மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில துணைப்பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசியதாவது :- மதுரை பொதுக்கூட்டத்திற்கு நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக கூட்டம் வந்தது. அதேபோல், திருப்பூர் பொதுக்கூட்டத்திற்கும் குறைந்தபட்சம் 2 லட்சம் பேர் கூடுவர். பாண்டி மண்டலத்தில் ஏற்பட்ட எழுச்சிபோலவே கொங்குமண்டலத்திலும் ஏற்படும், என்றார்.

இதனிடையே, மேலும், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்த மத்திய அரசின் மீதான குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, "நானும் அண்ணன் தம்பிதுரையும் தனியாகப் பேசிக்கொள்ளும்போது பல விசயங்களை யோசித்திருக்கிறோம். அதனால் இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை, என பதிலளித்தார்.
இதற்கடுத்தாக, பிரதமர் மோடிக்கு முன்னதாக அன்புமணி ராமதாஸ் அவர்கள் அடிக்கல் நாட்டியதாகச் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படம் குறித்து கேட்கையில், "தொழில்நுட்பம் வளர்ந்துள்ள சூழ்நிலையில் இதுகுறித்து கவலைப்படவேண்டியதில்லை." என்றார்.
பிப்ரவரி 10 -ம் தேதி திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியில் பாஜக சார்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பாரத பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். அந்த பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள இடத்தை மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியின் போது மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில துணைப்பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசியதாவது :- மதுரை பொதுக்கூட்டத்திற்கு நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக கூட்டம் வந்தது. அதேபோல், திருப்பூர் பொதுக்கூட்டத்திற்கும் குறைந்தபட்சம் 2 லட்சம் பேர் கூடுவர். பாண்டி மண்டலத்தில் ஏற்பட்ட எழுச்சிபோலவே கொங்குமண்டலத்திலும் ஏற்படும், என்றார்.

இதனிடையே, மேலும், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்த மத்திய அரசின் மீதான குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, "நானும் அண்ணன் தம்பிதுரையும் தனியாகப் பேசிக்கொள்ளும்போது பல விசயங்களை யோசித்திருக்கிறோம். அதனால் இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை, என பதிலளித்தார்.
இதற்கடுத்தாக, பிரதமர் மோடிக்கு முன்னதாக அன்புமணி ராமதாஸ் அவர்கள் அடிக்கல் நாட்டியதாகச் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படம் குறித்து கேட்கையில், "தொழில்நுட்பம் வளர்ந்துள்ள சூழ்நிலையில் இதுகுறித்து கவலைப்படவேண்டியதில்லை." என்றார்.