நீலகிரி : கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 48 பள்ளிகளுக்கு 2017-2018 ஆம் ஆண்டு தூய்மை பள்ளிக்கான விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜெ.இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.
நீலகிரி : கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 48 பள்ளிகளுக்கு 2017-2018 ஆம் ஆண்டு தூய்மை பள்ளிக்கான விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜெ.இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

அதில், உதகையை அடுத்த தும்மனட்டி கிராமத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியும் தேர்வாகியுள்ளது. இப்பள்ளியின் தேவைகளை பெற்றோர், ஆசிரியர் கழகம் மற்றும் நல்லுள்ளம் கொண்டவர்கள் நிறைவு செய்து வருகிறார்கள்.

இதில், பயிலும் மாணவ, மாணவியர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் மாநில மற்றும் அளவில் சிறந்து விளங்குகின்றனர். இதனைத் தொடர்ந்து இப்பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பள்ளி மாணவ மாணவியரின் ஆங்கிலப்புலமை, நடனம் யோகா உள்ளிட்டவற்றில் தனித் திறமையாக விளங்கிய மாணவ மாணவிருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

மேலும், பள்ளியின் பாதுகாப்பு இப்பகுதியைச் சேர்ந்த கப்பச்சி வினோத் என்பவர் நன்கொடையாக 4 கண்காணிப்பு கேமிராவினை வழங்கினார். பின்னர் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளியை நடத்தும் ஆசிரியர்களை அனைவரும் பாராட்டினர்.