உதகையில் ஜாக்டோ - ஜியோ சார்பில் சாலை மறியல் போராட்டம் : 300 பேர் கைது

நீலகிரி : ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உதகை சேரிங் கிராஸ் பகுதியில் இன்றும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 151 பெண்கள் உட்பட 300 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி : ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உதகை சேரிங் கிராஸ் பகுதியில் இன்றும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 151 பெண்கள் உட்பட 300 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 



 

தமிழ்நாடுஆசிரியர், அரசுஊழியர், அரசுப்பணியாளர் இயக்கங்களின் கூட்டமைப்பு நடவடிக்கை குழு சார்பில் தமிழக அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளான புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அரசுஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய 21 மாத நிலுவை தொகையை ஜனவரி 2016 முதல்வழங்கவேண்டும்.

காலி பணியிடங்களை நிரப்பத் தமிழக அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும், சிறப்பு கால முறை ஊதியம் பெறுபவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று உதகை ஏடிசி பகுதியில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. பகல்1 மணி முதல் 2 மணி வரை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால் முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு செல்லும் வழிகளான தொட்டபெட்டா, தாவரவியல்பூங்கா ஆகிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து வாகனத்தில் ஏற்றும் போது பெண் அலுவலர்களைக் காவல் அதிகாரி தரக்குறைவாக பேசியதாகக் கூறி ஜேக்டோ ஜியோ அமைப்பினர் அந்த காவல் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. அதன்பின் சமாதானம் செய்யப்பட்ட ஜேக்டோ ஜியோ அமைப்பினரைக் காவல் துறையினர் கைது செய்து திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். இதன் காரணமாக, வெகு நேரம் சாலையில் காத்திருந்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...