கோவை : அண்ணா பல்கலைக்கழகத்தின் கிரெடிட் தேர்வு முறையை மாற்றக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.
கோவை : அண்ணா பல்கலைக்கழகத்தின் கிரெடிட் தேர்வு முறையை மாற்றக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அரியர் முறைப்படி, குறிப்பிட்ட பாடத்தில் தேர்ச்சி அடையாதோர்களுக்கான தேர்வு, அடுத்த செமஸ்டரில் தேர்வினை எழுதலாம் என இருந்தது. 2017-ம் ஆண்டில் இருந்து அம்முறை மாற்றப்பட்டு, கிரெடிட் முறை அமல்படுத்தப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ளது.
இதனால், மாணவ, மாணவிகளின் தேர்ச்சி வீதம் குறைவதாகவும், விடைத்தாள் திருத்தம் செய்யும் முறை கடுமையாக்கப்பட்டிருப்பதால் தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ஓராண்டு காலம் வீணாகிறது என மாணவர்கள் வருத்தத்துடன் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே இருந்து புதிய தேர்வு முறையை ரத்து செய்யக்கோரியும், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பாவை கண்டித்தும் கோசங்களை எழுப்பிய வண்ணம் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.
இதனையடுத்து, புதிய தேர்வு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர். மேலும், ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அரியர் முறைப்படி, குறிப்பிட்ட பாடத்தில் தேர்ச்சி அடையாதோர்களுக்கான தேர்வு, அடுத்த செமஸ்டரில் தேர்வினை எழுதலாம் என இருந்தது. 2017-ம் ஆண்டில் இருந்து அம்முறை மாற்றப்பட்டு, கிரெடிட் முறை அமல்படுத்தப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ளது.
இதனால், மாணவ, மாணவிகளின் தேர்ச்சி வீதம் குறைவதாகவும், விடைத்தாள் திருத்தம் செய்யும் முறை கடுமையாக்கப்பட்டிருப்பதால் தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ஓராண்டு காலம் வீணாகிறது என மாணவர்கள் வருத்தத்துடன் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே இருந்து புதிய தேர்வு முறையை ரத்து செய்யக்கோரியும், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பாவை கண்டித்தும் கோசங்களை எழுப்பிய வண்ணம் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.
இதனையடுத்து, புதிய தேர்வு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர். மேலும், ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.