கோவை மாநகரில் நடந்த கொலை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் கைது : கோவை மாநகர காவல் ஆணையாளர் அறிவிப்பு

கோவை : கோவை மாநகரில் நடந்த கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் கண்டறியப்பட்டு, கைது செய்யப்படுவார்கள் என கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் தெரிவித்துள்ளார்.

கோவை : கோவை மாநகரில் நடந்த கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் கண்டறியப்பட்டு, கைது செய்யப்படுவார்கள் என கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்த கொலை வழக்குகளில் குற்றவாளிகள் இன்னும் பிடிபடாமல் இருக்கின்றனர். இந்தக் குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இதில், பல்வேறு கோணங்களில் மேற்கண்ட கொலை வழக்குகள் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்தும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இது தொடர்பாக மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் கூறியதாவது :- விரைவில் நிலுவையில் உள்ள கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டறியப்பட்டு கைது செய்யப்படுவார்கள். அதேபோல, மாநகர காவல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட காவல்துறை மின்னணு கண் செயலியை இதுவரை 5,600 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். சாலை விதிமீறல் தொடர்பாக 855 புகைப்படங்கள் புகார்களாக இதுவரை பெறப்பட்டுள்ளன. 

இந்தப் புகார்களில் உள்ள விதிமீறலுக்கு ஏற்ப, சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ரூ.3.55 லட்சம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை 50 ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்யும் வகையில், தொடர்ந்து விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...