கோவை : பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததைக் கண்டித்து கோவை மாவட்டம் மதுக்கரை அருகே ஆரம்பப் பள்ளி குழந்தைகள், தங்களது பெற்றோர்களுடன் சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை : பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததைக் கண்டித்து கோவை மாவட்டம் மதுக்கரை அருகே ஆரம்பப் பள்ளி குழந்தைகள், தங்களது பெற்றோர்களுடன் சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 8-வது நாளாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இன்றும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இன்று காலை 9 மணிக்குள் ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்பாவிட்டால், அவர்களின் பணியிடம், காலியிடமாக அறிவிக்கப்பட்டு, வேறு ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை இறுதி எச்சரிக்கையை விடுத்தது.
இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் 95 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி விட்டதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில், கோவை - கேரள மாநிலம் சாலையில் உள்ள மதுக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் ஆரம்பப் பள்ளிக்கு ஆசிரியர்கள் இன்றும் பணிக்கு வரவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர், குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுவதாகக் கூறியும், பள்ளிக்கு வராத ஆசிரியர்களைக் கண்டித்தும் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுக்கரை சந்திப்பு அருகில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து ஆரம்பப் பள்ளி குழந்தைகள் என சுமார் 80-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்து அங்கு வந்த போலீசார், குழந்தைகளின் பெற்றோர்களிடம் சமரசம் பேசி பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளிக் குழந்தைகளின் இந்த திடீர் சாலைமறியலால், சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 8-வது நாளாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இன்றும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இன்று காலை 9 மணிக்குள் ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்பாவிட்டால், அவர்களின் பணியிடம், காலியிடமாக அறிவிக்கப்பட்டு, வேறு ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை இறுதி எச்சரிக்கையை விடுத்தது.
இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் 95 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி விட்டதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில், கோவை - கேரள மாநிலம் சாலையில் உள்ள மதுக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் ஆரம்பப் பள்ளிக்கு ஆசிரியர்கள் இன்றும் பணிக்கு வரவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர், குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுவதாகக் கூறியும், பள்ளிக்கு வராத ஆசிரியர்களைக் கண்டித்தும் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுக்கரை சந்திப்பு அருகில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து ஆரம்பப் பள்ளி குழந்தைகள் என சுமார் 80-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்து அங்கு வந்த போலீசார், குழந்தைகளின் பெற்றோர்களிடம் சமரசம் பேசி பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளிக் குழந்தைகளின் இந்த திடீர் சாலைமறியலால், சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.