கோவை : நரசிபுரம் அருகே காட்டு யானை தாக்கியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் படுகாயம் அடைந்தார்.
கோவை : நரசிபுரம் அருகே காட்டு யானை தாக்கியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் படுகாயம் அடைந்தார்.
கோவையில் கடந்த இரண்டு நாட்களில் மனிதர்கள் - யானை மோதல் சம்பவங்கள் நடப்பது இது 4-வது முறையாகும். தீபன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தின் மூலம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சாலையோரமாக நின்றிருந்த ஒரு காட்டு யானை திடீரென அவரது இருசக்கர வாகனத்தின் மீது தாக்கியது. இதில், அவர் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் கங்கா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார்.
இதேபோல, கோவையில் நேற்று காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், ஒருவர் படுகாயமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் கடந்த இரண்டு நாட்களில் மனிதர்கள் - யானை மோதல் சம்பவங்கள் நடப்பது இது 4-வது முறையாகும். தீபன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தின் மூலம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சாலையோரமாக நின்றிருந்த ஒரு காட்டு யானை திடீரென அவரது இருசக்கர வாகனத்தின் மீது தாக்கியது. இதில், அவர் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் கங்கா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார்.
இதேபோல, கோவையில் நேற்று காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், ஒருவர் படுகாயமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.