போராட்டம் நடத்திய ஆசிரியர்களில் மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 95 சதவீதம் பேர் இன்று பணிக்கு திரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
போராட்டம் நடத்திய ஆசிரியர்களில் மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 95 சதவீதம் பேர் இன்று பணிக்கு திரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள், மாணவர்களின் நலன் கருதி பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், பணிக்கு திரும்பாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்தது.
எனினும், ஜாக்டோ-ஜியோ தரப்பில் பணிக்கு திரும்புவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதேசமயம், அரசின் வேண்டுகோளை ஏற்று ஆசிரியர்கள் படிப்படியாக பணிக்குத் திரும்ப தொடங்கினர்.
எனவே, இறுதியாக இன்றைய தினம் காலை 9 மணிக்குள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்களிடம் இடம் காலிப் பணியிடமாக அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை கடும் எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்து, நேற்று குறைந்த அளவிலேயே ஆசிரியர்கள் பணிக்கு வந்திருந்த நிலையில், இன்று பெரும்பாலான ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பி உள்ளனர். மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 95 சதவீதம் பேர் இன்று பணிக்கு திரும்பியிருப்பதாக பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பொருத்தவரை, 70 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியிருப்பதாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள், மாணவர்களின் நலன் கருதி பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், பணிக்கு திரும்பாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்தது.
எனினும், ஜாக்டோ-ஜியோ தரப்பில் பணிக்கு திரும்புவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதேசமயம், அரசின் வேண்டுகோளை ஏற்று ஆசிரியர்கள் படிப்படியாக பணிக்குத் திரும்ப தொடங்கினர்.
எனவே, இறுதியாக இன்றைய தினம் காலை 9 மணிக்குள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்களிடம் இடம் காலிப் பணியிடமாக அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை கடும் எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்து, நேற்று குறைந்த அளவிலேயே ஆசிரியர்கள் பணிக்கு வந்திருந்த நிலையில், இன்று பெரும்பாலான ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பி உள்ளனர். மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 95 சதவீதம் பேர் இன்று பணிக்கு திரும்பியிருப்பதாக பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பொருத்தவரை, 70 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியிருப்பதாக கூறியுள்ளார்.