கோவை : போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால், அவர்களுடைய பணியிடங்கள் காலியிடங்களாக அறிவிக்க பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.
கோவை : போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால், அவர்களுடைய பணியிடங்கள் காலியிடங்களாக அறிவிக்க பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.
9 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 22-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தால் பள்ளிக் கல்வி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாத அரசு, அவர்களை பணிக்குத் திருப்ப அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று (ஜன.,29) காலை 9 மணிக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால், அவர்களுடைய பணியிடங்கள் காலியிடங்களாக அறிவிக்கப்படும்.
அந்தப் பணியிடங்கள் அரசின் மூலம் தற்காலிக பணியாளர்களால் நிரப்பப்படும். இதுதொடர்பாக, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைத் தவிர்க்க ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும். அவர்கள், பணியில் சேர்வதை எஸ்.எம்.எஸ், வாட்ஸ் அப் அல்லது நேரிலோ, தங்களது மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் தகவல் அளித்துவிட்டு பணியில் சேரலாம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - உக்கடம் சாலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தி, போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தியதாகக் கூறி சுமார் 2,100-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 3,152 ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் நலன் கருதியும், பொதுத் தேர்வை கருத்தில் கொண்டும் போராட்டத்தை கைவிட வேண்டும் என அரசு மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
9 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 22-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தால் பள்ளிக் கல்வி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாத அரசு, அவர்களை பணிக்குத் திருப்ப அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று (ஜன.,29) காலை 9 மணிக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால், அவர்களுடைய பணியிடங்கள் காலியிடங்களாக அறிவிக்கப்படும்.
அந்தப் பணியிடங்கள் அரசின் மூலம் தற்காலிக பணியாளர்களால் நிரப்பப்படும். இதுதொடர்பாக, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைத் தவிர்க்க ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும். அவர்கள், பணியில் சேர்வதை எஸ்.எம்.எஸ், வாட்ஸ் அப் அல்லது நேரிலோ, தங்களது மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் தகவல் அளித்துவிட்டு பணியில் சேரலாம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - உக்கடம் சாலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தி, போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தியதாகக் கூறி சுமார் 2,100-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 3,152 ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் நலன் கருதியும், பொதுத் தேர்வை கருத்தில் கொண்டும் போராட்டத்தை கைவிட வேண்டும் என அரசு மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.