திருப்பூர் : பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் : பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் திருப்பூர் மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 2,500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து, 6 தனியார் மண்டபங்களில் அடைத்து வைத்தனர். இந்த நிலையில், மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டவர்களில், மாலை 6 மணியளவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆனால், போராட்டத்திற்கு தலைமை தாங்கிய நிர்வாகிகள் 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், அவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் திருப்பூர் மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 2,500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து, 6 தனியார் மண்டபங்களில் அடைத்து வைத்தனர். இந்த நிலையில், மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டவர்களில், மாலை 6 மணியளவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆனால், போராட்டத்திற்கு தலைமை தாங்கிய நிர்வாகிகள் 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், அவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.