கோவை : ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நோயாளி ஒருவருக்கு செயற்கை இரத்தக்குழாயை வெற்றிகரமாகப் பொருத்தி கோவை அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கோவை : ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நோயாளி ஒருவருக்கு செயற்கை இரத்தக்குழாயை வெற்றிகரமாகப் பொருத்தி கோவை அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பழனிசாமியின் மகன் லோகநாதன் (52). இவர் அதேபகுதியில், டெய்லராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த இரண்டு வருடங்களாக இடது கையில் நோய் தொற்று ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதைத் தொடர்ந்து, கடந்த 1-ம் தேதி இவர் கோவை அரசு மருத்துவமனையின் இரத்தநாள அறுவை சிகிச்சைத் துறையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு இடது கைக்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு இருப்பதைக் கண்டறிந்தனர்.
இதைத் தொடர்ந்து, அவருக்கு கடந்த 17-ம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவருக்கு ஏற்பட்டுள்ள இரத்தக் குழாய் அடைப்பை சரிசெய்யும் வகையில், செயற்கை ரத்த குழாயை பொருத்தி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ரூ.3 லட்சம் மதிப்புள்ள இந்த அறுவை சிகிச்சை முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு தற்போது லோகநாதன் முழுமையாக குணமடைந்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பழனிசாமியின் மகன் லோகநாதன் (52). இவர் அதேபகுதியில், டெய்லராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த இரண்டு வருடங்களாக இடது கையில் நோய் தொற்று ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதைத் தொடர்ந்து, கடந்த 1-ம் தேதி இவர் கோவை அரசு மருத்துவமனையின் இரத்தநாள அறுவை சிகிச்சைத் துறையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு இடது கைக்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு இருப்பதைக் கண்டறிந்தனர்.
இதைத் தொடர்ந்து, அவருக்கு கடந்த 17-ம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவருக்கு ஏற்பட்டுள்ள இரத்தக் குழாய் அடைப்பை சரிசெய்யும் வகையில், செயற்கை ரத்த குழாயை பொருத்தி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ரூ.3 லட்சம் மதிப்புள்ள இந்த அறுவை சிகிச்சை முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு தற்போது லோகநாதன் முழுமையாக குணமடைந்துள்ளார்.