ஏழை குடும்பங்களுக்கு மாதம் குறைந்தபட்ச ஊதியம் பெற நடவடிக்கை : ராகுல் காந்தியின் முதல் அதிரடி வாக்குறுதி

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சியமைத்தால், நாட்டில் உள்ள அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சியமைத்தால், நாட்டில் உள்ள அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். 

வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. அதேவேளையில், பா.ஜ.க.வுக்கு எதிராக பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக, அண்மையில் கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகளின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

இந்தப் பொதுக்கூட்டத்திற்கு கிடைத்த ஆதரவு மற்றும் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளால், எப்படியும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, பிரதமர் ஆகிவிடலாம் என்ற நம்பிக்கை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சியமைத்தால், நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழைகளுக்கும் குறைந்தபட்ச ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதன் மூலம், மக்களவை தேர்தலுக்கான வரலாற்று சிறப்புமிக்க வகையிலான முதல் வாக்குறுதியை அவர் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின் மூலம், நாட்டில் பசியைப் போக்கி, ஏழ்மையை அகற்றிவிடலாம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...