கோவை : சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தும் விதமாக, கோவை மாவட்டம் ஆழியாறு அணைப் பகுதியில் 33-வது வாரமாக வனப்பாதுகாப்பு அறக்கட்டளையின் சார்பில் களப்பணி மேற்கொள்ளப்பட்டது.
கோவை : சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தும் விதமாக, கோவை மாவட்டம் ஆழியாறு அணைப் பகுதியில் 33-வது வாரமாக வனப்பாதுகாப்பு அறக்கட்டளையின் சார்பில் களப்பணி மேற்கொள்ளப்பட்டது.
வனப்பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கில், டார்க்கெட் ஜுரோ என்விரான்மென்ட் மற்றும் வனப்பாதுகாப்பு அறக்கட்டளையும் இணைந்து வாரந்தோறும் ஆழியாறு - வால்பாறை சாலையில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிகளின் போது, பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவது, மதுபாட்டில்களை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று 3-வது வாரமாக நடந்த களப்பணியானது, காண்டூர் கால்வாய் மற்றும் 2 மழைத்தண்ணீர் செல்லும் கால்வாய்களில் இளம் தன்னார்வலர்கள் மேற்கொண்டனர். கடந்த 33 வாரங்களில் 4.5 டன் எடைகொண்ட பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மதுபாட்டில்களை வால்பாறை வனப்பகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து சேகரித்தனர்.

முதற்கட்டமாக, முதல் கொண்டை ஊசி வளைவில் இருந்து 30-வது கொண்டை ஊசி வளைவு வரை தூய்மைப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2-வது கட்டமாக, ஆழியார் சோதனை சாவடிப் பகுதியில் நடந்த தூய்மைப் பணிகளுக்கு பிறகு, தற்போது காண்டூர் கால்வாய் சுத்தப்படுத்தப்பட்டது.

வனப்பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கில், டார்க்கெட் ஜுரோ என்விரான்மென்ட் மற்றும் வனப்பாதுகாப்பு அறக்கட்டளையும் இணைந்து வாரந்தோறும் ஆழியாறு - வால்பாறை சாலையில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிகளின் போது, பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவது, மதுபாட்டில்களை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று 3-வது வாரமாக நடந்த களப்பணியானது, காண்டூர் கால்வாய் மற்றும் 2 மழைத்தண்ணீர் செல்லும் கால்வாய்களில் இளம் தன்னார்வலர்கள் மேற்கொண்டனர். கடந்த 33 வாரங்களில் 4.5 டன் எடைகொண்ட பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மதுபாட்டில்களை வால்பாறை வனப்பகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து சேகரித்தனர்.

முதற்கட்டமாக, முதல் கொண்டை ஊசி வளைவில் இருந்து 30-வது கொண்டை ஊசி வளைவு வரை தூய்மைப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2-வது கட்டமாக, ஆழியார் சோதனை சாவடிப் பகுதியில் நடந்த தூய்மைப் பணிகளுக்கு பிறகு, தற்போது காண்டூர் கால்வாய் சுத்தப்படுத்தப்பட்டது.
